பெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்.
இது ஒரு சர்சையான, அல்லது சிக்கலான தலைப்பு என்று தான் பலரும் முதலில் நினைப்பார்கள். எனெனில் வீடுகளுக்குள்ளளேயே பெண்கள் ஒடுங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதாக அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவே வலுவில் பெண்களை அரசியல் அரங்கிற்கு இழுத்து வருகிற ஒரு திட்டத்தை இஸ்லாம் அறவே ஏற்றுக் கொள்ளாது. அப்படை வாத முஸ்லிம்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தத தலைப்பு ஒரு சுமூகமான தலைப்பாக இருக்க முடியாது என்று அவர்கள் கருதக் கூடும். உணமை நிலவ்ரம் அப்படி அல்ல. பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, ஆன்களின் காமப் பசிக்கு இலக்கானவர்களாக கருதப் பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதே இஸ்லாமின் குறிக்கோள். இதற்காவே இஸ்லாம் பர்தா உள்ளிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண்களுக்காகச் செய்துள்ளது. அதே போல சமூக ரீதியாக சில சீர்கேடுகளை கலைவதற்காக ஆணும் பெண்ணும் சகஜமாக கலந்துறவாடுவதை தடை செய்துள்ளது. ஒழுக்கம் பண்பாடு கட்டுப்பாடு சார்ந்த எந்த விசயத்த்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்க்கும் இஸ்லாம் சமமான எல்லைக் கோடுகலையே வரைந்துள்ளது. கற்பெனப்படுவதை பொதுவில் வைட்ப்போம் என்ற தீர்மாணத்தை பாரதி பாடுவதற்கு 14 நுற்ற...