ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள்
தி ஹிந்துவில் கடந்த மாதத்தில் இரு கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லி அமைந்திருந்தது. அதற்கு எழுதிய கடிதம். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கும் – அல்லது அவர்களை செதுக்க முயற்சிக்கும் கட்டுரைகளை இந்து வெளியிடுகிறது . ஒரு வகையில் மகிழ்ச்சியே ! அதே நேரத்தில் , இந்த முட்டாள்கள் ஏன் இப்படி மற்றவர்களை அழித்து தாமும் அழிந்துபடுகிறார்கள் என்கிற கேள்வியை எத்தனை நாட்களுக்கு நாம் புறக்கணிக்க முடியும் என்பதையும் நாம் விவாதிக்க வேண்டும் ! நான் முஸ்லிமாக இருந்து கொண்டு இதை சொல்வதால் இது தீவிரவாதிகளுக்கு ஆதரவானது என அர்த்தப்படுத்தி விட வேண்டாம் . சத்தியமாக இத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு ஆதாரவாக அல்ல , மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அக்கறையில் இந்த கேள்வியை முன் வைக்கிறேன் . பாதிப்புக்களை கண்டு கலங்கி நிற்கும் போதும் , ஆறுதல் தெரிவிக்கிறபோதும் கூட நாம் உணர்ச்சிவசப்படலாம் . அதற்கடுத்த கட்டத்திலாவது எதனால் இது நடந்தது , இதை தடுப்பதற்கான அறிவார்த்தமான வழி எது என்று யோசிக்கலாமே ! நம...