Sunday, August 02, 2009

காதியானியும் கண்ணம்மா பேட்டையும்

சென்னை ராயப் பேட்டை பகுதியில் இந்துக்களின் பிரபலமான மயாணம் அமைந்துள்ள இடம் கண்ணம்மா பேட்டை. சென்னையின் தெருக்களில் தாறுமாறாக வாகனம் ஓட்டுகிறவர்களை கண்டால் ‘ மவனே நீ.. ஊட்டுக்கு போவ மாட்ட... கண்ணம்மா பேட்டைக்க்குத்தான் போவ.. என்று மக்கள் அர்ச்சிப்பது வழக்கம். அது போல இன்னோரு பிரபல மயாணம் இருக்குமிடம்
கிருஷ்ணாம்பேட்டை .
சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த 36 வயது காதியானி பெண் ஒருவர் கடந்த மே மாதம் 30 தேதி இறந்து பேனார். அவரது உடல் இராயப் பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் மையவாடியி அடக்கம் செய்யப் பட்டது. அதற்கு சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அமைப்புக்கள் ஆட்சேபனை செய்யவே அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப் பட்டு கிருஷ்ணாம் பேட்டை மயானத்தில் புதைக்கப் பட்டது.
முஸ்லிம்கள் குறித்த ஒரு செய்தி என்றால் அதைப் பற்றிய 10 சதவீத உண்மையை கூட அறிந்து கொள்ளாமல் செய்தி வெளியிட்டுவிடுவது பத்ரிகையாளர்கள் இதையும் ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்தனர். .
காதியானி என்பது ஒரு தனி மதமாகும். பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்ற ஊரில் மீர்சா குலாம் என்பவரால் உருவாக்கப்பட்டதே காதியானி மதம். சீக்கிய மதம் எப்படி அனைத்து மதங்களிலிருந்தும் கருத்துக்ககளை எடுத்துக் கொண்டு ஒரு மதமாக உருவாகி இருக்க்கிறதோ அது போலவே காதியானி மதமும் உருவாகியது. சீக்கிய மதத்தில் இந்து மதச் சாயல் மிகுந்திருப்பது போல காதியானிகளிடம் முஸ்லிம்v சாயல் அதிகமாக இருக்கிறது அவ்வளவே!
சீக்கியர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. பா.ஜ.க வைத்தவிர மற்றவர்களும் அவ்வாறு சொல்ல முயற்சிப்பதில்லை. ஆனால் காதியானிகளை முஸ்லலிம் என்று அடையாளப் படுத்த காதியானிகளும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்கின்றன. இதன் பின்னணியில் இருப்பது பிரிட்டிஷ் அரசு. காதியானிகளின் தலைமையிடம் லண்டனில் இருக்கிறது என்பதும் அதன் கிளை அலுவலக்ம் ஒன்று இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவில் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும்.
இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். அதனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிக்கிற இவர்களை முஸ்லிம் அல்லாத சிறுபான்மை இனமாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இவர்கள் தனி மதத்தினர் என்பதை அடையாளப் படுத்தியது. சவூதி அரசும் அவ்வரே அறிவித்து ஹஜ்ஜுக்கான அனுமதியை அவர்கள் கோர முடியாது என்று அறிவித்தது.
முஸ்லிம் சமூகத்திற்கும் காதியானிகளுக்கும் இடையே எந்த வித தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் பிரிட்டிஷை தொடர்ந்து இந்தியாவிலும் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்தும் முயற்சி தொடந்து நடக்கிறது. காதியானிகளின் இஸ்லாமியத் தொடர்பை விட இந்து மதத் தொடர்பே வலுவானது. அதன் காரணமாக பாபர் பள்ளிவாசலை உடைக்கச் சென்ற குழுவில் கூட அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தச் சூழலில்தான் இறந்து போன காதியானி ஒருவரின் உடலை பொய்யான சான்றிதழைக் காட்டி வேண்டு மென்றே முஸ்லிம் மையவாடியில் புதைத்துள்ளனர். ஒரு இறந்து போன உடலை புதைத்தல் என்ற மனிதாபிமானத்தை தாண்டி இதற்குள் இருக்கிற அரசியல் விளையாட்டைக் கருத்தில் கொண்டே அவ்வாறு புத்தைக்க்ப் பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வல்லரசு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிற காரணத்தால காதியானி மதத்தவரிடம் பணத்திற்கொன்றும் பஞ்சமில்லை. தனி மயாணம் அமைத்துக் கொள்ள அவர்களால் முடியும். ஆனாலும் சொந்தப் பிணங்களை வைத்தே அரசியல் நடத்த அவர்கள் முயற்சி செய்வதால் தான் ஒவ்வொரு காதியானியின் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
புதைக்கப் பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில் அதில் தவறொன்றும் இல்லையே ? இனி சென்னையில் ஒரு காதியானி இறந்தால் கண்ணம்மாபேட்டை மயாணம்தான் அவருக்குரியது எனபது முடிவாகி விட்டதல்லவா?
காவல் துறை எத்தனை பிணங்களை தோண்டி எடுத்து சோதனை செய்கிறது? அது பிரச்சினையோடு தொடர்புடையதே தவிர மனிதாபிமானத் தோடு முடிச்சுப் போடுகிற செய்தி அல்லவே!