பெருநாள் சிந்தனை : உதவும் கரங்கள்
மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு தடவை சொன்னார். “நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.” முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நம்பிக்கை அளிக்கிற தலைவராகவும், உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு சவால்விடுபவராகவும் திகழ்ந்த மஹாதீரின் இந்தக் கருத்து மிகுந்த கவனத்திற்குரியது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கனிசமானது. உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 630 கோடி என்றால் அதில் 150 கோடிப் பேர் முஸ்லிம்கள். அதாவது நால்வருக்கு ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகம் முழுவதிலும் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளில் கனிசமாக செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோலிய பலம், அல்லது கனிம வளம், குறைந்த பட்சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாழ்வது, சில பகுதிகளில் அரசியில் ஆளும் தர்ப்பை தீர்மாணிப்பவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் அவர்களது செல்வாக்குக்கு குறையொன்றும் இல்லை. என்றாலும் அவர்களது மரியாதை கேள்விக்குரியதாகி இருக்கிறது. இன்றைய சூழலில் அவ...