Posts

Showing posts from October, 2008

பெருநாள் சிந்தனை : உதவும் கரங்கள்

மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது ஒரு தடவை சொன்னார். “நாம் ஒருவருக்கொருவர் உதவ முடியாமல் இருக்கிறோம் என்பதே நமது ஒற்றுமைக்கு தடையாக இருக்கிறது.” முஸ்லிம்களது வரலாற்றில் ஒரு சிக்கலான கால கட்டத்தில் நம்பிக்கை அளிக்கிற தலைவராகவும், உலகமே அஞ்சிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு சவால்விடுபவராகவும் திகழ்ந்த மஹாதீரின் இந்தக் கருத்து மிகுந்த கவனத்திற்குரியது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கனிசமானது. உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 630 கோடி என்றால் அதில் 150 கோடிப் பேர் முஸ்லிம்கள். அதாவது நால்வருக்கு ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகம் முழுவதிலும் பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் தாங்கள் வாழும் நாடுகளில் கனிசமாக செல்வாக்குடையவர்களாக இருக்கிறார்கள். பெட்ரோலிய பலம், அல்லது கனிம வளம், குறைந்த பட்சம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாழ்வது, சில பகுதிகளில் அரசியில் ஆளும் தர்ப்பை தீர்மாணிப்பவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் அவர்களது செல்வாக்குக்கு குறையொன்றும் இல்லை. என்றாலும் அவர்களது மரியாதை கேள்விக்குரியதாகி இருக்கிறது. இன்றைய சூழலில் அவ...

ஜம்மு : இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதம்

நெருப்பில்லாமல் புகையுமா? என்றால் புகையாது தான். ஆனால் உயர் பதவியில் இருந்த இரண்டு பொறுப்பில்லாத மனிதர்கள் மூட்டிவிட்ட சிறு நெருப்பு இந்தியா அரசியல் வானில் இவ்வளவு பெரிய புகை மூட்டத்தை ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் நம்புவதற்கு சிரமாமாக இருக்கும் தான். ஆனால் அது தான் உணமை. காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும் பாரதீய ஜனதாவை சார்ந்தவருமான s.k.சின்ஹா, அமர்நாத் ஷரீன் போர்டின் நிர்வாக அதிகாரியாக இருந்த அருண்குமார் I.A.S ஆகிய இரண்டு பேர் சர்வசாதரணமாக மூட்டிவிட்ட நெருப்பில் காச்மீர் பள்ளத்தாக்கே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதங்கள் மட்டுமே மனிதர்கள் வசிக்க முடிந்த ஒருபனிமலைப் பிரதேசத்திற்கான போராட்டத்தில் இந்திய அரசியலில் வெகுசூடான விசித்திரமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய இலட்சணங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. நாட்டின் 62 வது சுதந்திரதின கொடியேற்றத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் காஷ்மீரில் அமைதி ஏற்பட ஒத்துழைப்புத்தாருங்கள் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ சகதிகளிடம் கையேந்தாத குறையாக கோரிக்கக வைத்திருப்பது அந்த விசித்திரங்களில் முதல் அம்சம். ஆனால் இத்தனைக்கும் சூத்திரதாரியான ஆர...