Tuesday, August 19, 2008

பெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும்.

இது ஒரு சர்சையான, அல்லது சிக்கலான தலைப்பு என்று தான் பலரும் முதலில் நினைப்பார்கள். எனெனில் வீடுகளுக்குள்ளளேயே பெண்கள் ஒடுங்கியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதாக அவர்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவே வலுவில் பெண்களை அரசியல் அரங்கிற்கு இழுத்து வருகிற ஒரு திட்டத்தை இஸ்லாம் அறவே ஏற்றுக் கொள்ளாது. அப்படை வாத முஸ்லிம்களும் இதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தத தலைப்பு ஒரு சுமூகமான தலைப்பாக இருக்க முடியாது என்று அவர்கள் கருதக் கூடும். உணமை நிலவ்ரம் அப்படி அல்ல.

பெண்கள் கவர்ச்சிப் பொருளாக, ஆன்களின் காமப் பசிக்கு இலக்கானவர்களாக கருதப் பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதே இஸ்லாமின் குறிக்கோள். இதற்காவே இஸ்லாம் பர்தா உள்ளிட்ட சில பாதுகாப்பு ஏற்பாடுகளை பெண்களுக்காகச் செய்துள்ளது. அதே போல சமூக ரீதியாக சில சீர்கேடுகளை கலைவதற்காக ஆணும் பெண்ணும் சகஜமாக கலந்துறவாடுவதை தடை செய்துள்ளது.

ஒழுக்கம் பண்பாடு கட்டுப்பாடு சார்ந்த எந்த விசயத்த்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்க்கும் இஸ்லாம் சமமான எல்லைக் கோடுகலையே வரைந்துள்ளது. கற்பெனப்படுவதை பொதுவில் வைட்ப்போம் என்ற தீர்மாணத்தை பாரதி பாடுவதற்கு 14 நுற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் சட்டமாக்கி அமுல் படுத்தியும் விட்டது. இது விசய்த்தில் பாலின வித்தியாசம் என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை. ஒழுக்க மீறல்களுக்கான தண்டனை எதுவும் பெண்களுக்கென்று தனிப்பட்டு இஸ்லாத்தில் விதிக்கப் படவில்லை. ஒழுக்க மீறலுக்கான இஸ்லாமின் தண்டனைகளை பெண்களுக்கு எதிராண நடவடிக்கையாக சிலர் பேசுவது திட்டமிட்ட விஷமப் பிரச்சாரமாகும்.

பர்தா ஒழுங்கைப் பேணி பெண்கள் சம்பாத்தியத்தில் ஈடுபடவோ, சமுதாயப் பணிகள் ஆற்றவோ, எந்தத் தடையும் இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம் சமுதாயமும் பெண்களின் பங்களிப்பை ஏற்பதில் எந்த வித சஞ்சலத்திற்கும் ஆளானதில்லை. பெண்கள் ஒரு பொருட்டக மதிக்கப் படாத கால கட்டத்தில் நபிகளள் நாயகத்தின் அருமைத் துணைவியார் ஆயிஷா அம்மையார் அறிவித்த 2100 நபிமொழிகளை எந்த வித சலனமும் இன்றி முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. அவரது வார்த்தகள் சட்டவிதிகளாக ஏற்கப் பட்டன. நபிகள் நாயகத்தின் துணைவி என்பதால் இந்தத் தனிச்சிறப்பு என்று யாரும் கருதிவிடக்கூடாது. மற்ற பெண்மணிகள் அறிவிக்கும் நபிமொழிகளும் ஏற்கப் பட்டன. சில கட்டங்களில் ஆண்களது கருத்துக்களைவிட மேலானதாக பெண்களது கருத்துக்கள் ஏற்கப் பட்டன. உதாரணத்திற்கு, நோன்பின் சமயத்தில் சஹர் நேரத்தில் குளிக்க வேண்டிய நிர்பந்த நிலையில் இருக்கிற ஒருவர் குளித்துவிட்டுத்தான் சஹர் சாப்பாட்டைஉண்ண வேண்டும் என்று அபூஹூரைரா (ரலி) அவர்கள் சொல்ல, தேவையில்லை சாப்பிட்டுவிட்டு பிற்கு குளித்துக் கொள்ளலாம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போது அன்னை ஆயிஷாவின் அறிவிப்பு ஏற்கப் பட்டது. அதுவே சட்டமாக பரிணாமம் பெற்றது. போர்க்களத்தில் போராட பெணகள் அழைக்கப் படவில்லை என்றாலும் சூழ்நிலைகலின் நிர்பந்தத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் செய்த சண்டைகள் ஏற்கப் பட்டன. யுத்த காலங்களில் மருத்துவம் போன்ற பணிகளில் பெணகளின் உதவி வரவேற்கப் பட்டிருக்கிறது. கல்வி மற்றும் சட்டப் பணிகளில் அவர்களது பங்கேற்பும் பங்களிப்பும் மிகுந்த மரியாதையோடு வரவேற்கப் பட்டிருக்கிறது. இது அத்தைனையும் பெண்கள் அவர்களுக்கு இஸ்லாம் வகுத்திருக்கிற எல்லைகளில் இருந்து ஆற்றிய பணிகளாகும்.

இஸ்லாத்தின் அந்த எல்லைகள் பெண்களை எந்த மூலையிலும் முடக்கிப் போட்டுவிடவில்லை. ஹஜ்ஜுக்கு செல்கிற விசயத்தில் பெண்களுக்கு தர்ப்பட்டிருக்கிற அங்கீகாரமும் அது ஆண்களைப் போலவே அவர்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டிருப்பதும்- கூட பெண்களை ஆண்களுக்கு இளைத்தவர்களாக இஸ்லாம் கருதவில்லை என்பதற்கு போதுமான சான்றாகும். அதே நேரத்தில் ஹஜ்ஜுக்கு செல்கிற பெண் தகுந்த துணை ஒன்றுடன் தான் செல்ல வேண்டும் என்பது ஒரு சரியான பார்வையில்ல் இஸ்லாம் பெண்களளைப் பார்க்கிறது என்பதை அறிந்து கொள்ளப் போதுமானது.

ஆணக்ளைவிட அதிகம் பயப்படுகிற அல்லது பதட்டப் படுகிற அவளது குண இயல்பு கருதியும், பாதுகாப்புக் குறைவான அவளது உடல் இயல்பு கருதியும் சில பாதுகாப்பு உபயங்களை இஸ்லாம் வகுத்திருக்கிறது. அவ்வளவே!

இதே இயல்புகளின் அடிப்படையில் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்புக் கருதி அவளை சில பணிகளை மேற்கொள்வதிலிருந்து இஸ்லாம் தடுத்து வைத்திருக்கிறது. அதில் ஒன்று ஆட்சி செய்வது. இது பெண்ணை அவமானப் படுத்துவதோ மலினப் படுத்துவதோ அல்ல. பெண்களுக்கான இந்தத் தடைகள் தவிர்க்க முடியாதவை. உலகில் பெண்களுக்கு அதிக உரிமைகளை வழ்ங்கியிருக்கிற நாடு என்று பெறுமைப் படுகிற அமெரிக்காவில் சுமார் 65 க்கும் மேற்பட்ட துறைகள் பெணக்ளுக்கு உரியவை அல்ல என்று தீர்மாணிக்கப் பட்டிருக்கிறது. ஏன் இன்று வரை அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண் தேர்ந் தெடுக்கப் பட்டதில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் அவர்களது வசீகரமிக்க மனைவி ஹிலாரி போட்டியில் தற்போதைக்கு முன்னிலையில் இருப்பதாக ஒரு தோற்றம் தெரிந்தாலும் அவர் அமெரிக்க அதிபராவதற்கான் வாய்ப்பு இல்லை. ஒருக்கால் அவர் அதிபராகிவிட்டால் அது அதிசயம்தான் என்று சொல்கிற அரசியல் ஆய்வாளர்கள் அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். உலகின் அதிக அதிகாரம் மிக்க அந்தப் பதவிக்கு ஒரு பெண் வருவதை அமெரிக்கர்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் காரணம் ஆச்சரியமானதல்ல. எதார்த்தமானது. கம்யூனிஸ்ட்களின் கனவு தேசமான ரஷ்யாவிலும் இதே நிலை தான். கேரளாவில் ஒரு பெண்மணி முதல்வ்ராதை ஜாதியத்தின் பெயரால் தட்டித்தகர்த்தவர்கள் நமது கம்யூனிஸ சகாவுகள் என்பதையும் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதே போல ஆசிய நாடுகள் பல்வற்றிலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பெணகள் பலரும் அவர்களைச் சார்ந்த ஆண்களின் நிழலில் ஆட்சிக்கு வந்தவர்களேயன்ற்றி தமது அரசியல் திறனில் வந்தவர்கள் அல்ல. (இதில் ஆட்சிக்கு வந்தபிற்கு சிலரது திறமை பிரகாசித்தது என்பது உண்மைதான்). உலகின் எந்த நாட்டு ராணுவத்திற்கு ஒரு பெண் தலைமையேற்றிருக்கிறார் என்பதும் விடை இல்லாத கேள்விதான். இந்த வகையில் தான் சர்வ வல்லமை படைத்த தலைமப்பீடத்தை, அரச பட்டத்தை ஒரு பெண் ஏற்பதை தவிர்க்குமாறு இஸ்லாம் கூறியுள்ளது.

ஆனால், சில நேரங்களில் சந்தர்ப் சூழ்நிலைகள் காரணமாக பெண்கள் ஆட்சிப் பொறுப் பேற்றதை இஸ்லாம் கீழ்த்தர்மாக விமர்ச்சிக்க வில்லை. இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களது காலத்தில் யமன் தேசத்தின் ஒரு பகுதியை ஒரு பெண்மணி அரசாண்டதை குறிப்பிடுகிற திருக்குரானிய வசனங்கள் எதுவும் அது குறித்து இரண்டாந்தரக் கண்ணோட்டம் கொண்ட எந்தச் சொல்லையும் உதிர்க்கவில்லை. ஆனால், அவரது முடிவெடுக்கும் மேதமையை திருக்குரான் பறைசாற்றியுள்ளது.

சரவ அதிகாரம் மிக்க தலைமை பீடத்தை பெண்கள் ஏற்பது குறித்து இஸ்லாம் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கிறது என்றாலும் அவர்களது அரசியல் அதிகாரத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக முடக்கிவைக்கிற எந்த உத்தரவையும் வெளிப்படையாக கூறவில்லை.

அதே நேரத்தில் அரசியலில் கருத்துச் சொல்லும் தகுதி பெண்களுக்கு உண்டு என்பது ஏற்கப் பட்டிருக்கிறது. உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று ஆயிஷா அம்மையார் கோரியதையும் அதற்காக அவர்கள் போராட்டத்திற்கு தயாரானதையும் இஸ்லாமிய வரலாறு கண்டிருக்கிறது. தகுதியுடைய பெண்கள் அரசியலில் பங்கேற்பது தடுக்கப் படவேண்டியதல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு இந்த சின்ன சான்று போதுமானதா என்ற கேள்வி எழுந்தாலும் தவிர்க்க முடியத சந்தர்ப்பங்களில் இத்தைகை நிலைப் பாட்டை ஏற்பதில் தவ்று இருக்க முடியாது.

அத்தைகய தவிர்க்க முடியாத ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இந்திய முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது.

இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையில் கடந்த மே மாதம் 7 ம் தேதி சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்ககளுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகம் பாரளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்கொள்கிற ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த சட்டமுன்வடிவு இதற்கு முன் பலமுறை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடக்க நிலைய்லேயே முடக்கப் பட்டுவந்தது.

1975 ம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து ஆய்வதற்கான ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான அவைகளில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை எற்கப் படவில்லை.

1993 ம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தி 73 வது 74 பிரிவுகளின் மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப் பட்ட போது பெண்களுகான தனி இட ஒதுக்கீடு குறித்து ஆராய ஒரு குழு கீதா முகர்ஜியின் தலைமையில் நியமிக்கப் பட்டது. அந்தக் குழு பெண்கள்ளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியது. அதே கால கட்டத்தில் உலகின் பல் பாகங்களிலும் நடந்த பெண்ணுரிமை மாநாடுகளில் இதே கோரிக்கை முன் வைக்கப் பட்டு வந்தது. குறிப்பாக 1995 சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் இந்த கோரிக்கை அழுத்தமாக முன் வைக்கப் பட்டது. பீஜிங்க் மாநாட்டின் தொடர்ச்சி யாக அதிகாரத்தில் பெண்களுக்குகு 33 சத்வீத ஒதுக்கீடு கோரிக்கை வலிமைபெற்றது. உலகம் முழுவதிலும் பெண்கள் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து போராட துவங்கின். உலகில் உழைக்கும் வர்க்கத்தில் மூன்றில் ஒரு ப்ங்கு பெண்கள் இருக்கிறார்கள் என்ற சதவீதக் கண்க்கே இந்த 33 சதவீதம் என்ற கோரிக்கைக்கு காரணம். பாகிஸ்தனில் 22.5 சதவீத இட ஒடுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.

1990 களின் இறுதியில் நடைபெற்ற உள்ளாட்ட்சித் தேர்தலில் இந்தியாவின் பல் மாநிலங்களிலும் பெண்களுக்கு 33 சதவித ஒதுக்கீடு வழங்கப் பட்டது. சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் இதை அமுல்படுத்த அரசியல் கட்சிகள் விடவில்லை. பாரதீய ஜனதா கட்சி தலைமை தாங்கிய கடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது இதன் முன்வடிவு சமர்ப்பிக்கப் பட்ட போது அப்போதைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி இதை கடுமையாக எதிர்த்து ம்சோதா பேப்பரை கிழித்துப் போட்டார்கள். அவர்கள் வெளிப்படையாக் எதிர்த்தார்கள் மற்றவர்கள் உள்ளுக்குள் அதை ரசித்தார்கள். உணமையில் எந்த அரசியல் கட்சிக்கும் இந்த மசோதாவில் உளமார்ந்த பற்றில்லை. காரணம் முதலில் அந்தக் கட்சிகளின் நிர்வாக அமைப்புக்களில் பெண்களுக்கு ஒரு பத்து சதவீதம் கூட பொறுப்புக் கிடையாது. இப்படி ஒரு சட்டம் வந்தால் அதனால் தங்களது அரசியல் இருப்ப்பு பறிபோய்விடும் என்று அஞ்சுகிற தலைவர்கள் ஒரு பக்கம். இத்தனை பெண்களுக்கு எங்கே போவது என்று கவலைப் படுகிற கட்சித் த்லைமை மறுபக்கமாக இம்மசோதா விழுங்கவும் முடியாத துப்பவும் முடியாத ஒரு அந்தர நிலையில் இருந்தது. தங்களது முற்போக்கு அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கடந்த ஆறு வருடங்களாக இம்மசோதாவுக்கு ஆதர்வளிப்பதாக சொல்லத் தவ்றவில்லை. இதை எதிர்த்த அரசியல் கட்சிகள் கூட குயுக்தியாக சில பிரச்சினைகளை கிளப்பி இம்மசோதாவை மடக்க முயன்றன்வே தவிர உண்மையான பிரச்சினைகளை அவை முன் வைக்கவில்லை. எனெனில் எந்தக் கட்சியும் பழைமைவாத முத்திரையை ஏற்கத் தயாரக இல்லை.

இந்தச் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்களின் நிர்பந்தம், பாரதீய ஜனதாவை வென்றெடுக்க வேண்டிய தேவை, சோனியாவின் தலைமை இத்தனை காரணங்களும் மொத்தமாக சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ம்சோதாவை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்தி விட்டது.

கடந்த மே 7ம்தேதி மசோதா முன்வைக்கப் பட்ட போது ராஷ்ட்ரீய ஜனதா தளமும் சமாஜ்வாடி த்னதா தளமும் அதற்கு முட்டுக் கட்டை போட முயன்றன. ஆனால் அதையும் மீறி மசோதாவை தாக்கல் செய்வதில் காங்க்ரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இப்ப்தைக்கு மசோத சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நிலைக்கு குழுவிற்கு அனுப்பப் பட்டுள்ளது. அந்தக்குழு மகக்ளிடமும் அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்று ம்சோதாவை இதே வடிவில் தக்கல் செய்வதா? அல்லது திருத்தம் செய்து தாக்கல் செயவதா என்பதை முடிவு அரசுக்கு தகுந்த அலோசனைகளை சொல்லும். அதன் பிறகு மக்களைவைல் தாக்கல் செய்யப்படும். இது அரசியல் சாசண சட்ட திருத்த்மாக இருப்பதால் பிற்கு இம்ம்சோதா மாநிலங்களுக்கு அனுப்பப் படும். இரண்டு பங்கு மாநிலங்கள் இம் ம்சோதாவை ஏற்றுக் கொண்டன் என்றால் அதன் பிறகு ஜனாதிபதியின் கையெழுத்திற்காக இதுஅனுப்பப் படும். ஜனாதிபதி கையெழுத்திட்ட பிறகே இது சட்டமாக ஆகும். அந்த வகையில் இந்த மகளிர் இட் ஒதுக்கீடு ம்சோதா சட்டமாவதற்கு இன்னும் நீண்ட பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆயினும் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இம்மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பது போல காட்டிக் கொள்வதால் இம் மசோதா சட்டமாவதற்கான வாய்ப்ப் முன்பைவிட அதிக பிரகாசமாகவே இருக்கிறது.

ஒருக்கால் இம்மசோதா நிறைவேற்றப் பட்டால் அப்போது பெரிதும் தர்மசங்கடத்துக்குள்ளாக போவது முஸ்லிம் சமுதாயமாகத்தான் இருக்கும். எனேனில் முஸ்லிம் வெற்றி பெற்தற்கான வாய்ப்புள்ள தொகுதிகள் பெண்கள் தொகுதிகளாக அறிவிக்கப் படுகிற வாய்ப்பு அதிகம். உள்ளாட்சி தேர்தல்களின் போது இது அனுபவப்பூர்வமாக உணரப்பட்டது. முஸ்லிம்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பெண்கள் தொகுதியாக மாற்றப் படுவது அரசு நிர்வாகத்தின் திட்டமிட்ட சதியா? அல்லது எதார்த்தமாக நடக்கிறதா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு இடையில் இந்தப் பிரச்சினை வந்து விட்டது. இப்போது இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்து முடிவெடுத்து வைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை.

முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் அரசியலில் ஈடுபாடோ ஆர்வமோ காட்டுவதில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமைய வில்லை. இப்போது அதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பக்கம் சாக்கடையை விட கேவலாமக எல்ல விதமான சீர்களுக்கும் மூலகாரண்மாக இருக்கிற அரசியல். மற்றொருபக்கம் முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு இழ்த்துவரவேண்டிய நிர்பந்த்தத்திற்கு ஆளாகியிருக்கிற சூழில் முள்ளில் சிக்கிய ஆடையை கவனமாக எடுக்கிற லாவகத்தொடு இந்தப் பிரச்சினையை சமுதாயம் கையாள வேண்டியிருக்கிறது. அதற்கு சில யோசனைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன். சமுதாய அக்கறையுள்ளவர்கள் இதை பர்சீலிக்கட்டும்.

மார்ர்க வரையரைகளுக்கு உட்பட்ட பெண்கள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ளும் மன்ப் பக்குவத்திற்கு சமுதாயம் வரவேண்டும்,
இதற்காக பெண்களை ஆயத்தப் படுத்தவும் வேண்டும்
மார்ர்க அறிஞர்கள் அதை அனும்திக்கவும் வேண்டும்.
போதுமான செல்வாக்கும் தகுதியும் இல்லாத பெண்கள் அரசியலில் ஈடுபடும் போது சில நேரங்களில் அது அவர்கள் சீரழிவதற்கு காரணமாகி வைடுகிறது. பல் அரசியல் கட்சிகளின் மக்ளிர் அணியினரப் பற்றிய செய்திகள் அவலட்ச்ண்மாக இருப்பது அவ்ர்களது சமூக பொருளாத நிலையே காரணம், என்வே முஸ்லிம் சமூகத்திலிலுள் வசதி படைத்த தலைமைத்துவ தகுதியுள்ள ஓரளவு வயதான பெண்கள் தேர்தல்களில் போட்டியிடவும், அரசியல் ஆர்வம் காட்டவும் வேண்டும். அத்தகைய நிலையிலுள்ளவர்களை அவர்க்ளைச் சார்ந்தவர்கள் ஊக்கப் படுத்த வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் சில அச்சங்களை கலைய இது உதவும். அதே போலமுஸ்லிம் சமூகத்தின் பொது மக்களும் அரசியலில் ஈடுப்டும் பெண்கள் குறித்து தவறுதலாக பேசக் கூடாது.

மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸம்த் சாஹிப் அவர்களது மகளாரும் மில்லத் ஹஜ் சர்வீஸின் உரிமையாளர் முஸப்பர் அவர்களது துணைவியார்மான பாத்திமா முஸப்பர். ஒரு வார இதழின் பர்தா குறித்த் கேள்விக்கு இஸ்லாம் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டு முடியை மறைக்க வேண்டும் என்று சொன்னதே தவிர மூளையை மறைக்கச் சொல்ல வில்லை என்று சொன்ன போது அது சமுதாயத்தின் கவுரவத்தை கட்டிக்காப்பதாக இருந்தது. இது போன்ற பல பெண்கள் அரசியலுக்கு வருவது சமுதாயத்திற்கு நன்மையாகவே அமையும்.

மார்க்க அடிப்படையில் இத்தகைய பெண்கள் தயார் படுத்தப் படவில்லையானால் நஜ்முல்ல ஹிப்பதுல்லா போன்ற முஸ்லிம் சமுதாயத்தின் மரியாதையை பங்கப் படுத்துகிற பெண்கள் மட்டுமே அரசிய்லுக்கு கிடைப்பார்கள்.