gaza
சொந்த பந்தங்களால் கைவிடப் பட்ட அநாதை போல, சுற்றி இருந்த அரபுநாடுகளாலும், உதவிக்கு வந்து ஊரை அடித்துத் தின்கிற ஐரோப்பிய நாடுகளாலும் ஏன் தன் சொந்த தேசத்தின் அதிபரால் கூட கைவிடப் பட்ட பரிதாபத்திற்குரிய காஸா நகரம் வரலாற்றில் மற்றுமொரு கருப்பு அத்தியாயாயத்தை சந்தித்தது. 2008 டிஸம்பர; 26 ம் தேதி முதல் 2009 ஜனவரி 17 வரை ழுpநசயவழைn ஊயளவ டுநயன என்று பெயரிட்டு இஸ்ரேல் நடத்திய பேயாட்டத்தால் நிலை குலைந்து போனது. கதறி அழ மட்டுமே காப்புரிமை பெற்ற சமுதாயம் மீண்டும் ஒருமுறை அழுது தீர;த்தது.எந்த சோகத்திலும் தம் சுதந்திர வேட்கையை விட்டுக் கொடுக்காத காஸா நகரத்து மக்கள் உலகத்தின் ஒப்பாரியை ஒரு கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மறு கரத்தில் ராக்கெட் லாஞ்சர;களை ஏந்தி நின்றனர;. யுத்தம் கொடுரமாகத் தொடர;ந்தது. நிலம், நீர;, ஆகாயமென தன் சக்திக்கு உட்பட்ட அத்தனை திசைகளிலிர;ந்தும் இஸ்ரேல் தாக்குதலை தொடர;ந்ததது. உலகமெங்கிருந்தும் கண்டனக் கனைகள் பறந்தன. கண்டன ஊர;வலங்களாலும் ஆர;ப்பாட்டங்களாலும் நாடுகள் குலுங்கின. புதிய அதிபரை பார;த்த மயக்கத்தில் அமேரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மறந்திருந்த ஒரு பொன்னான சந்தர;ப்பத்தில் ஐந...