Posts

Showing posts from April, 2014

மல்லிப்பட்டினத்தில் நடந்த்து என்ன?

காலையில் பத்ரிகையை புரட்டியதும் மல்லிப்பட்டினத்தில் கலவரம் என்ற செய்தி அதிர்ச்சியளித்த்து. ஓட்டுக்கேட்டு அந்த வழியாக சென்ற பா ஜ கவின் வேட்பாளரை முஸ்லிம்கள் தடுத்த்தாகவும் அதையும் மீறி உள்ளே சென்ற வேட்பாளரின் வாகனத்தை முஸ்லிம் இளைஞர்கள் கற்களால தாக்கியதால் வேட்பாளரும் அவருடன் இருந்தவர்களும் காயமடைந்த்தாகவும் . அதன் பிறகு வன்முறை சம்பவத்தில் சில வாகன்ங்களுக்கும் ஒரு வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட்தாக் அந்தச் செய்தி கூறியது. மல்லிப்பட்டினத்தில் பணியாற்றும் இமாம் ஒருவரையும் அந்த ஊரின் பிரதான மீனவர் சங்க பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த்த போது கீழ் காணும் செய்திகள் அறியக் கிடைத்தன. இராமநாதபுரம் தொகுதியில் இரு கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி இருப்பதால் எப்படியாவது அங்கு வென்று விட வேண்டும் என்பதை பா ஜ க் ஒரு தேசிய தீர்மாணமாகவே வைத்திருக்கிறது. திருவாளர் மோடி வருகிற 16 ம் தேதி இராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இரமாநாதபுரம் வேட்பாளராக ஹெச் இராசா நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த்து, ஆனால் கருப்பு என்கிற முருகானந்த்த்தை பா ஜ க வேட்பாளராக அறிவ...

தேர்தல் களம் 1

தேர்தல் நெருங்க நெருங்க ஆலிம்களை தேடி தலைவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். ( குறிப்பாக முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகிற தொகுதிகளில் ) இதில் இடைத்தரகர்கள் சிலரும் இலாபம் பார்க்க நினைக்கின்றனர். ஆலிம்க ளால் தங்கள் பழகுகிற மக்கள் மட்டத்தில் திட்டமான கருத்தை உருவாக்க முடியும் . முதலில் அதற்கு ஆலிம்களுக்கு என்று ஒரு சுய கருத்து வேண்டும் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆலிமாக எனது கருத் துக்களை எனது பிளாக்கில்   பதிவு செய்கிறேன் .   இதில் நீங்களும் உடன்பட்டால் இதே கருத்தை பரப்பலாம் . எச்சரிக்கை வெள்ளிமேடையை   குறிப்பிட்ட யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ பயன்படுத்த வேண்டாம் . என்னுடைய கருத்தோடு உடன்படாவிட்டால் என்னுடைய கருத்தைச் சொல்ல எனக்குள்ள உரிமையை நீங்கள் மறுக்க கூடாது. என கருத்தை ஒத்துக்கொண்டால் தான் நீ முஸ்லிம் இல்லேன்னா நீ முஸ்லிமே அல்ல என்ற மாதிரி ச்ண்டைக்கெல்லாம் வரக்கூடாது. இந்த தேர்தல் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமானது என ஒரேயடியாக தூக்கி வைக்க என்னால் இயலவில்லை . அதாவது ம...