Posts

இறுதிச் சடங்கின் அரசியல்

2026 பிப்ரவரி 28 ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படையின் வக்கிர தாக்குதலுக்கு பலியான ஈரானின் உச்ச தலைவர் அலீ அல் காமினாயின் இறுதிச் சடங்குகள் நாளை 9 ம் தேதி ஈரானின் மஸாத் நகரில் நிறைவடைய இருக்கின்றன. கடந்த மூன்றாம் தேதி தொடங்கிய இந்த சடங்குகள் பற்றி விவரிக்க விக்கீபீடியா தனியாக ஒரு பக்கத்தை (State funeral of Ali Khamenei) தொடங்கியிருப்பது இந்த இறுதிச் சடங்கை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றும் ஈரானின் முயற்சியை வெற்றியடைச் செய்திருக்கிறது .   துக்கம் அனுஷ்டித்துக் கொள்ள ஈரானுக்கு ஒரு வார கால விடுமுறை அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். என்றாலும். ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை காட்டிக் கொள்ளாவிட்டால் டிரம்ப் குணம் என்னாவது ?   அதனால் நான் நினைத்திருந்தால் ஒரு குண்டு போட்டு அனைவரையும் தீர்த்திருக்க முடியும் என்று கூறி தனது அதிகார போதைக்கு சூடேற்றிக் கொண்டார்.     “They are all there. One shot [and we can take them all out], but we are not going to do that because then we would have nobody to negotiate with,” Trump...

புறாக்கிராம்

  நாங்கள் புறாக்கிராமத்திலிருந்து பேசுகிறோம் என்ற குரலை கேட்டதுமே நான் மகிழ்ச்சியடைந்தேன். நாகூர் தர்காவிலுள்ள மிக உயரமான (131) அடி மினாராவை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) கட்டினார். அவருக்கு பின்னர் தஞ்சையை ஆண்ட மன்னர் நாகூர் தர்காவின் மினாராக்களில் குடியிருக்கிற புறாக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு ஊரை மானியமாக வழங்கினார். அந்த ஊரின் பெயர் தான் புறாக்கிராமம். தர்காக்கள் மத நல்லிணக்கத்திற்கு எப்படி எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன் என்பதற்கு அடையாளமாக பல சொற்பொழிவுகளிலும் புறாக்கிரமத்தை எடுத்துக் கூறியிருந்த எனக்கு அந்த ஊரிலிருந்து முதல் முறையாக ஒரு அழைப்பு என்றால் மகிழ்ச்சி வராதா ? ஆர்வத்தேடு நேற்று அந்த கிராமத்திற்கு சென்ற போது அங்கிருந்த கம்பீரமான பள்ளிவாசலும் அதை சுற்றி அழகுற அமைந்திருந்த ஊரும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அளித்தன. பள்ளிவாசல் நிர்வாகிகளின் அன்பும் அரவணைப்பும் மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. புறாக்கிரமத்தின் வரலாற்றை பள்ளிவாசல் நிர்வாகிகளோடு பகிர்ந்து கொண்ட போது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த பள்ளிவாசல் பற்றி கல...

ஹஜ்ஜின் நினைவுகள்

அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனினும் ஹஜ்ஜின் நினைவுகளிலிருந்து மனம் இன்னும் மீளவில்லை ஹஜ்ஜின் நிறைவான ஒரு நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஹாஜிகளிடம் கோரினோம். எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் நாட்டு ஹாஜி, டயர் வடிவமைப்பில் விற்பன்னர். ரேடியல் டயர் தொழில் நுட்பத்தை முதன் முதலாக உருவாக்கியவர், தனது அனுபவங்களை பேசினார். ஐந்து வருடமாக நான் ஹஜ்ஜுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறோன். கம்பெனியின் பணிச் சுமை காரணமாக ஏதோ ஒரு காரணத்தால் பயணம் தடை பட்டுக் கொண்டே வந்தது. இந்த ஆண்டு இராஜினாமா செய்து விட்டு நாங்கள் ஹஜ்ஜுக்கு வந்தோம். மெக்ஸிகோ பாரிஸ் என உலகின் பல நாடுகளில் நான் வசித்திருக்கிறேன். அங்கு செல்லும் போது என் மனைவியை வீல் சேரில் வைத்துத் தான் அழைத்துச் செல்வேன். அவரால் அதிக தூரம் நடக்க முடியாது. ஆனால் இந்த ஹஜ்ஜுப் பயணத்தில் நாங்கள் ஒரு முறைகூட வீல் சேர் பயன்படுத்த வில்லை. அல்ஹம்து லில்லாஹ், ஹஜ் முடிந்து விட்டது என்றார்....

இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார்.

இது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். ஒரு ஷார்ட் விசிட்டாக தில்லி சென்ற சந்தர்ப்பத்தில் காலையிலிருந்து மதியம் வரை ஓய்வு கிடைத்தது. அப்போது தில்லியில் நான் சுற்றி பார்க்க நினைத்திருந்த பட்டியலில் குதுப்மினார் இருக்கவில்லை. ஒரு வரலாற்று மாணவனாக குதுப் மினாரைப் பற்றி படித்த தகவல்களோ இந்தியாவின் தொல்பொருள் சின்னங்களில் முக்கியமானது என்ற குறிப்போ என்னை ஈர்த்திருக்கவில்லை.   மன்னர்கள் தமது பெறுமைக்காக கட்டத் தொடங்கி முடிக்காமல் விட்ட ஒரு கோபுரம் என்ற அளவில் அது என்னிடம் ஈர்ப்பற்றிருந்தது. அன்று அதிகாலையில் என் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது குர் காவ்னிலிருந்து நான் செல்லும் வழியில் குதுப்மினார் இருந்தது. “குலா ரஹேதோ தேக்கேங்கே!” இந்த நேரத்தில் திறந்திருந்தால் பார்ப்போம் என டிரைவர் சொன்னார். திறந்திருந்தது.   அதிக சிரத்தையில்லாமல் டிக்கெட் வாங்கிக் கொண்டு பெரிய அந்த பசுமையான வளாகத்திற்கு கிட்டத்தட்ட தனியாளாக உள்ளே நுழைந்த போது அந்த கம்பீரமும் ரம்மியமும் எனது அசிரத்தையை பறக்கடித்து விட்டது.   அது ஒரு பிரம்மாணடமான பள்ளிவாசல். அதன் ஒரு முனையில் செங்கள் கட்டிட...

ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள்

தி ஹிந்துவில் கடந்த மாதத்தில் இரு கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லி அமைந்திருந்தது. அதற்கு எழுதிய கடிதம். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கும் – அல்லது அவர்களை செதுக்க முயற்சிக்கும் கட்டுரைகளை இந்து வெளியிடுகிறது . ஒரு வகையில் மகிழ்ச்சியே ! அதே நேரத்தில் , இந்த முட்டாள்கள் ஏன் இப்படி மற்றவர்களை அழித்து தாமும் அழிந்துபடுகிறார்கள் என்கிற கேள்வியை எத்தனை நாட்களுக்கு நாம் புறக்கணிக்க முடியும் என்பதையும் நாம் விவாதிக்க வேண்டும் ! நான் முஸ்லிமாக இருந்து கொண்டு இதை சொல்வதால் இது தீவிரவாதிகளுக்கு ஆதரவானது என அர்த்தப்படுத்தி விட வேண்டாம் . சத்தியமாக இத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு ஆதாரவாக அல்ல , மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அக்கறையில் இந்த கேள்வியை முன் வைக்கிறேன் . பாதிப்புக்களை கண்டு கலங்கி நிற்கும் போதும் , ஆறுதல் தெரிவிக்கிறபோதும் கூட நாம் உணர்ச்சிவசப்படலாம் . அதற்கடுத்த கட்டத்திலாவது எதனால் இது நடந்தது , இதை தடுப்பதற்கான அறிவார்த்தமான வழி எது என்று யோசிக்கலாமே ! நம...