Friday, July 30, 2010

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

அஜ்மல் கசாப்- சாத்தான் அனுப்பிய அரக்கன்

“சாத்தான் அனுப்பிய அரக்கன் இவன்”– அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் கோபம் கொப்பளிக்க உச்சரித்த இந்த கடுஞ்சொற்கள் இறுதியில் 22 வயது அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத்த்ந்து விட்டன. இந்தியக் குற்ற வழக்கு சரித்திரத்தில் மிக விரைவாக வழங்கப் பட்ட தீர்ப்பு இது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் சதுக்கம், சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம் ஊள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 25 வெளிநாட்டவர் உள்ளிட்ட 166 பேர் பலியாயினர். 304 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் இந்தியாவின் பிரபல என்கவுனடர் ஸ்பெஷலிஸ்டான ஹேமந்த் கர்கரே உட்பட 14 போலீஸாரும் அப்பாவிப் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்

மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் பலியாயினர். அஜ்மல் காசப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் மும்பை தாக்குதல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இவ்வவழக்கில் 17 மாதத்திற்குள்ளாக 650 சாட்சிகளை விசாரிக்கப் பட்டு மே மூன்றாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட்து. அமரிக்க பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகள் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட கருவிகளைப் பற்றிய விவரங்களையும் தொலைத் தொடர்புச் சாதன்ங்கள் எப்படிப் பயன்படுத்தப் பட்டன என்பதையும் நிதிபதி மதன் லட்சுமண்தாஸ் தகில்யானிக்கு விளக்கினர். இந்திய நீதிமன்ற வரலாற்றில் அந்நிய நாட்டு சாட்சிகள் விசாரிக்கப் பட்ட முதல் வழக்கு இது.

அது போல, இந்தக் கோரத் தாக்குதல் உள்ளூர் மக்களின் உதவியில்லாமல் நடந்திருக்க முடியாது என்று “மோடி”கள் இட்ட கூக்குரல் காரணமாக அவசர அவசரமாக வழக்கில் சேர்க்கப் பட்ட பஹீம் அன்சாரி சபீய்யுத்தின் அஹ்மது ஆகியோர் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப் பட்ட்தும் இந்திய குற்ற வழக்குச் சரித்திரத்தில் ஒரு அதிசயம் தான்.

என்றாலும் வழக்கு நடைபெற்ற விதமும்- வழக்கின் போது விவாதிக்கப் பட்ட விசயங்களும் இந்தியா என்கிற மாபெரிய தேசத்தின் புலானய்வுத்திரன், விசாரனைத்தரம் குறித்த பலத்தை சந்தேகத்தையும் கேள்விகளையும் விட்டுச் சென்றுள்ளதை மறுக்க முடியாது.

கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட்தை கொண்டாடிய மீடியாக்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களது மனது இப்போதுதான் ஓரளவு சாந்தமடைந்துள்ளதாகவும் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டால் மாத்திரமே அவர்கள் முழுமையாக நிம்மதியடைவார்கள் என்று காரம் க்க்கிக் க்க்கிப் பேசின. TIMES NOW தொலைக்காட்சியின் மூத்த செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி Arnab Goswami அநியாயத்திற்கு மூல வியாதிக்கார்ரைப் போல நாற்காலி நுனியில் உட்கார்ந்து கொண்டு உடனிருந்த நிபுணர்களையும் பார்வையாளர்களையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார். பாதிக்கப் பட்ட சிலர் குற்றவாளியை மன்னித்து விட்ட்தாக சொன்னது ஆண்டி கிளைமாக்ஸாக அமைந்த்து.

கசாப் தண்டிக்கப் பட வேண்டியவனே! தண்டனை பெற்ற கசாப் சிறையில் ஐவேளை தொழுவதாகவும் திருக்குர் ஆன் ஒதுவதாகவும் செய்திகள் வருகின்றன. அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்பவர்கள் அல்லாவின் பக்தர்களாக காட்டிக் கொள்வது அசமஞ்சித்தனமே தவிர வேறில்லை. “அப்பாவி ஒருவனைக் கொல்பவன் மனித சமூகத்தையே கொலை செய்தவனைப் போன்றவன். ஒரு உயிரைக் காத்தவன் மனித சமூகத்தையே காப்பாற்றியவனவான் என்று பேசுகிற திருக்குரானுக்கு செந்தம் கொண்டாட அவர்கள் ஒரு போதும் அருகதை அற்றவர்களே.

இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகளும் வழிகாட்டுதல்களும் தெளிவானாவை. முல்லாக்களும் மதரஸாப் பீடங்களும்தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்ற தேவைகளற்றவை. என்வே இந்த தீவிரவாத்தை தாக்குதலுக்கு இஸ்லாமோடு தொடர்பு படுத்தி நியாயம் கற்பிக்க எந்த வழிவகையுமில்லை.

பாகிஸ்தானிலிருக்கிற சைத்தான் பிடித்த சில இந்திய எதிரிகள் இந்த்த் தாக்குதலுக்கு காரணமாக இருக்க கூடும். அதில் மதச் சாயத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அஜ்மல் கசாபை நினைவோடும் நினைவிழக்கச் செய்த நிலையிலும் விசாரித்த அதிகாரிகள் அவனிடம் அதிகமாக கேட்ட கேள்விகள் “ஜிஹாதைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? ஜிஹாதைப் பற்றி திருக்குர் ஆன் என்ன சொல்கிறது.” என்பவையாகும். இது பற்றி கசாபுக்கு எதுவும் தெரிந்திருக்க வில்லை. அவனால் எந்த் திருக்குர் ஆன் வசனத்தையும் கூறமுடியவில்லைஎன்று அதிகாரிகளின் அறிக்கை தெளிவு படுத்துகிறது,

"When we asked whether he knew any verses from the Quran that described jihad, Ajmal Amir said he did not," police said. "In fact he did not know much about Islam or its tenets," according to a police source. (ABC News, 03-Dec-2008)

கசாபுக்கு வழங்கப் பட்ட தண்டனையை இந்திய முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்கிற அமைப்புக்கள் பலவும் வரவேற்றன. அகில இந்திய முஸ்லிம் 'தனியார் சட்ட வாரியத்தின் துணை தலைவர் சாதிக் கூறுகையில், 'ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவித்த கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது சரியான தீர்ப்பு தான். அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களை, பல முறை தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கருணை காட்ட முடியாது என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.

முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் காலித் ரசீத் கூறுகையில், 'இந்திய நலனுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு, இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

முஸ்லிம் அமைப்புக்களின் இத்தகைய வெளிப்படையான எதிர்ப்புச் சூழ்நிலையிலும் கூட மும்மபை தீவிரவாத்த் தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று மீடியாக்கள் அடையாளம் படுத்த்தின., இந்திய உள்துறை அமைச்சர் அதிகம் படித்த சிதம்பரம் உட்பட பலரும் இதை இஸ்லாமிய அடிப்படை வாத்த்தோடு இணைத்துப் பேசினர். இத்தப் போக்கு பிரச்சினையின் உண்மையான கண பரிமாணத்தை திசை திருப்பவே செய்யும்.

மும்பை விசேஷ நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரும் மும்பைத் தாக்குதல் வழக்கும் விசாரணையும் முழுமையடையாத்தாகவே இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரனை வெளிப்படுத்த்த் தவறிய மிக முக்கியமான அம்சம் – இச சதித்திட்ட்த்திற்கான நோக்கம் – என்ன என்பதே!

கசாபின் மீதான குற்றச் சாட்டுகள் நீரூபிக்கப் பட்டிருப்பதாக கூறிய நிதிமன்றத்தில் அவனுக்கு வழங்கப் பட வேண்டிய தண்டனைப் பற்றி வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் சுமார் 2 மணிநேரம் வாதிடினார்.

மும்பையின் ஆர்தர் சாலைச் சிறைச் சாலையில் அமைக்கப் பட்டிருந்த விசேஷ நிதிமன்றத்தில் நிரம்பி வழிந்த கூட்ட்த்திற்கிடையே நிதிபதி தகில்யானியின் முன்னால் அவர் எடுத்துவைத்த வாதங்கள் கசாபின் குற்றச் செயலின் கனபரிமாணத்தை படம்பிடித்துக் காட்டின.

கசாப் திட்டமிட்டே இத்தாக்குதலுக்கு தயார்படுத்தப் பட்டவன். லஷ்கர் தைய்யிபா அமைப்பின் பிதாயீன் பிரிவைச் சேர்ந்தவன் மிகவும் முன்கூட்டியே திட்டமிட்ட இந்த சதிச் செயலை நிதானமாக, எவ்வித சலனமுமின்றி சிரித்தபடியே நிறைவேற்றியுள்ளான். மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த நேரத்தில் தான் வந்துவிட்டதாக கசாப் வருத்தப்பட்டுப் பேசியதே அவனது கொலை வெறியின் தீவிரத்தைப் காட்டு வதாகவும், சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தனது கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் சேர்ந்து 60 பேரை கசாப் கொன்றுள்ளதாகவும், கசாப் சிரித்தபடியே அப்பாவி மக்கள் மீது துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளதாகவும் இது முழுக்க முழுக்க ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் என்று கூறிய உஜ்வால் நிகாம். இந்தக் கொடூரச் செயலுக்கான நோக்கம் – அல்லது காரணம் என்ன என்பதை உண்மையாகவும் முழுமையாகவும் கடைசி வரை விளக்கவே இல்லை.

பத்ரிகைகளும் இணையதள செய்தி ஊடகங்களும் பணத்திற்காகவே இத்தாக்குதலில் கசாப் ஈட்பட்ட்த்தாக் கூறின. இத்தாக்குதலில் வெற்றிகரமாக முடித்துவிட்டல் தனக்கு 1.50.000 ரூபாய் வழங்கப் படும் என்று வாக்க்களிப்பட்ட்தாகவும் தனது தந்தையின் பேல்பூரி வியாபாரத்தால் வசதி பெறமுடியத தன்னுடைய குடும்பம் இந்த பணத்தால் வசதி பெறக்கூடும் என்று கசாப் கூறியதாக ஏபிசி செய்தி கூறியது.
I was promised that once they knew that I was successful in my operation, they would give Rs 150,000, to my family," said Qasab.
ஏ பி சி இதற்கு அடுத்த்தாகச் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது. கசாப் சொன்னான் “எனக்கு நல்ல உணவும் பணமு கொடுத்தீர்கள் என்றால் அவர்களுக்காக நான் செய்த காரியத்தை உங்களுக்காகவும் செய்வேன்” "If you give me regular meals and money I will do the same for you that I did for them," he said

பதிரிகைகளிலும் இணைய தளங்களிலும் உலாவருகிற இது போன்ற செய்திகளில் எவ்வளவு நிஜம் எவ்வளவு கற்பனை என்பதை சாமாணிய மக்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால வலிமையான ஒரு தேசத்தின் புலன் விசாரணை அமைப்பாலும் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? என்ற கேள்விக்கு விடையேதும் கிடைக்க வில்லை என்பதே இந்த வழக்கு விசாரனையின் மாபெரிய சருகுதலாகும்.

நிதிபதிகள் தங்களது தீர்ப்ப்புகளில் குற்றம் இன்ன நோக்கத்திற்காக செய்யப் பட்டது என்பதை தெளிவுபடுத்துவார்கள். கடுமையான தண்டனைகளின் போது இது இன்னும் விரிவாக சொல்லப்ப்டும். ஆனால் இந்த வழக்கிலோ நீதிபதி தகில்யானி “ இந்த மனிதன் (கசாப்) எந்த மனிதாபிமான உதவியையும் கோருவதற்கு தகுதிதியை இழந்துவிட்டான். ( "This man has lost the right to get any humanitarian relief," Tahaliyani observed. ) என்று கூறினாரே தவிர இவனை குற்றம் செய்யத் தூண்டிய காரணம் இது என்று எதையும் கூற வில்லை.

ஒரு கொடூரத் தாக்குதல் ஏன் நடத்த்ப் பட்டது? அதன் பின்னணி என்ன என்பது தீர்மாணமாகவும் தெளிவாகவும் அடையாளம் காணப்படாமல், தீவிரவாதம் அல்லது இஸ்லாமிய தீவிரவாதம் அல்லது பாகிஸ்தானிய தீவிரவாதம் என்ற ஒரு சொற்றடரை மட்டுமே கீறல் விழுந்த இசைத்தட்டாக சுழல விடுவது பிரச்சினைக்கு தீர்வாகிவிடுமா என்ற கேள்விக்கு விடை எதுவும் இதுவரை காணப்படவில்லை.

எந்த ஒரு பெரிய விபத்தின் போதும் முழுமையற்ற தற்காலிக கண்டுபிடுப்புக்களை பெரிய சாதனையாக முழக்கி நீட்டுகிற இந்திய புலனாய்வு மற்றும் நீதி அமைப்புக்கள் தேசத்தின் கோடிக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன என்றே சொல்ல வேண்டும்.

ஹைதரா பாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்களின் போது இந்திய புலனாய்வு அமைப்புக்கள் நடத்திய அலம்பல்களை என்ன வென்று வர்ணிப்பது? பங்களா தேஷிலிருந்து ஹுஜி அமைப்பின் கமாண்டோ ஒருவன் மொபைல் போன் மூலம் குண்டு களை வெடிக்கச் செய்துள்ளான் என்று எவ்வளவு அழுத்தமாக ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அடித்துச் சொன்னார்கள்? இப்போது அது உள்ளூர் இந்துத்துவ அமைப்பின் வேலை என்று தெரியவருகிற போது புலனாய்வு அமைப்புக்கள் கேலிப்பார்வைக்கு ஆளாகின்றன என்றாலும் அவற்றுக்கு ஏற்படுகிற அவமானத்தை விட இந்தியப் பொதுஜனத்தின் பாதுகாப்பு எவ்வளவு தூரம் கேள்விக்குரியதாகிறது என்பதல்லவா முக்கியம்?

மும்பை தீவிரவாத்த் தாக்குதல் வழக்கியில் கையில் சிக்கிய ஒருவனை கழுவிலேற்றியாச்சு என்பது மட்டுமே இந்த தீர்ப்பின் ஒற்றைச் சாதனை என்று சொன்னால கண்டிப்பாக நமது நாட்டின் புலனாய்வு மற்றும் நீதி அமைப்பின் ஆளுமை சந்தேகத்திற்குரியதாகிவிட வாய்ப்பிருக்கிறது,

அதிர்ஷ்ட வசமாக இந்த வழக்கில் இரண்டு இந்திய முஸ்லிம்கள் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பஹீம் அன்சாரி சபிய்யுத்தீன் அஹ்மது ஆகிய அந்த இருவரும் தான் கசாபுக்கு மும்பை நகரத்தின் வரை பட்த்தை கொடுத்தார்கள் என்பதே குற்றச்சாட்டு. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்த வரைப்படம் கசங்கவோ இரத்தக் கறை படிந்த்தாதக்வோ இருக்கவில்லை என்று கூறி நீதிமன்றம் அவ்விருவரையும் விடுதலை செய்துவிட்டது.

புலனாய்வு அமைப்புக்களின் முதுகில் விழுந்த கசையடி அது. இனி இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்கள் தேசியை மாநில நகர வரை படங்களை கையில் வைத்துக் கொள்வது ஆபத்தானது என்று அச்சப்படுகிற ஒரு சூழ்நிலையை நாட்டின் பல பகுதிகளிலிம் புலனாய்வு அமைப்புக்கள் ஏற்படுத்தியிருந்தன.

சுற்றுலா செல்வதற்கு வசதியாக நம்வீட்டில் ஒரு பெரிய மேப் வாங்கி வைக்க வேண்டும் என்று என் மனைவி சொன்னார். சத்தம் போடாதே! யாராவது போலீஸ்காரன் காதில் விழுந்து தொலைக்கப் போகிறது. முஸ்லிம் வீட்டில் மேப் வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணைக்கு வந்து விடப் போக்றார்கள் என்று சில மாதங்களுக்கு முன் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

கோவையின் புற நகர்ப் பகுதியில் குடியிருந்த இரண்டு இளைஞர்களை அவர்கள் கோவை நக்ரத்தின் மேப் வைத்திருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்த்து கோவை மாநகர காவல் துறை. கோவை நகரை தகர்க்க பயங்கர சதி என்று மூன்று நாட்கள் மீடியாக்கள் அலறின. பின்னர் அந்த இளைஞர்கள் விடுதலை செய்யப் பட்டார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் மும்பை நீதிமன்றத்தின் இந்த்த் தீர்ப்பு புலனாய்வு அமைப்புக்களின் சாரமற்ற குற்றச்சாட்டுகளின் வேஷத்தை கலைத்து விட்ட்து.

இந்தியப் புலனாய்வு அமைப்பின் இந்த ஆளுமைக் குறைவினாலேயே இரு இந்தியர்கள் விடுதலை செய்யப் பட்ட்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த்திக் கொள்ள முயன்றது. இந்திய நீதிம்னறத்தின் தீர்ப்பு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதிலேயே குறியாக இருந்திருக்கிறது என அது நல்ல பிள்ளை போல பேசியது.

அமெரிக்காவிற்கு வால் பிடிக்கும் போக்கினால் தனது மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை இழந்து விட்ட பாகிஸ்தானிய அரசுகளை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கென்னவோ செத்த பாம்பை அடிக்கிற கதையாகத்தான் தோன்றுகிறது. இது விசத்தில் கெட்டிக் கார்ர்களான நம்மூர் அரசியல் வாதிகள் அதையே ரொம்ப சாதுர்யமாக செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று அரற்றிக் கொண்டிருப்பது நம்முடை அரசியல் வாதிகளும் புலனாய்வு அமைப்புக்களுக்கும் சொளகரியமான ஒரு காரணமாகப் அமைது விட்ட்து. இந்த வார்த்தையை சொல்லி விட்டால் இந்தியப் பொதுஜன்ங்கள் அமைதியடைந்து விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையே அதற்கு காரணம்.

நம்முடைய நாட்டின் பொருளாதார தலைநகரான ஒரு நகரத்திற்குள் பக்கத்து நாட்டிலிருந்து பத்து பேர் சர்வ சாதாரணமாக பய்ங்கர ஆயுதங்களுடன் வந்து ஒரு 64 மணிநேரத்திற்கு நாட்டைபை கதி கலங்க வைத்து விட்டார்கள் எனில் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்களிடம் எத்தகைகைய விசாரணை நடைபெற்றது என்ற தகவல் எதுவும் இது வரை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப் படவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிம்னறமும் இது குறித்த எந்த கருத்தையும் தெரிவிக்க வில்லை.

இத்தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெற்றதாக மட்டுமே குறிப்பிட்ட அரசு வழக்கறிஞரும் அதை ஆமோதித்த நீதிமன்றமும் இந்த் தாக்குதலுக்காக இந்திய மண்ணில் மேற்கொள்ளப் பட்ட முன்னேற்பாடுகள் பற்றி எதையும் குறிப்பிட வில்லை.

இந்த வழக்கில் திடீர்ன்று முளைத்த அமெரிக்கத் தயாரிப்பான ஹெட்லீக்கு என்ன தண்டனை என்று கூறப்படவில்லை. அவர் தன் மும்பைத் தாக்குதலுக்கு வடிவம் கொடுத்தவர் என்று அமெரிக்கா கூறுயது. அந்த வேதவாக்கை இந்திய அரசு அப்படியே எதிரொலித்த்து. தன்னுடையை மண்ணில் மிகப் பெரிய இரத்தக் களறியை ஏற்படுத்திய ஒருவனைப் பற்றிய உண்மையை அமெரிக்காவே கண்டறிந்து அவனை கைது செய்த பிறகு அந்தச் சதிகாரனை எங்களிடம் கொடு என்று கூட கேட்காமல் அவனை விசாரிக்கவாவது அனுமதி வேண்டும் என்று இந்தியா மன்றாடியது. உலகில் இதைவிட நீதமான ஒரு கோரிக்கை இருக்க முடியாது. அமெரிக்கா மறுத்துவிட்ட்து.

உலகில் யாரிடமிருந்தும் தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் உரிமையும், மற்ற யாருக்கும் தேவையானதை தர மறுக்கும் உரிமையும் அமாரிக்க மக்களுக்கு உண்டு. அது அந்த நாட்டின் சுதந்திர தேவி அவர்களுக்கு பாலூட்டிய பண்பாடு. அதனால் அமெரிக்க இந்தியாவின் நீதமான கோரிக்கையை ஏற்கமறுத்த்து. அமெரிக்காவின் இந்த நீதியுணர்வு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் மும்பைத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக ஹெட்லியின் பெய்ரும் அவருக்கு இடமளித்த ராணாவின் பெய்ரும் முக்கியமாக அடிபடத் தொடங்கிய பிறகு, அமெரிக்காவின் கூற்றை இந்தியாவும் எதிரொலித்து விட்ட பிறகு, இந்த வழக்கின் குற்றவாளிகளின் பட்டியலில் ஹெட்லியின் பெயர் ஏன் சேர்க்கப் படவில்லை. அவர் மீதான குற்றத்திற்கு தண்டைனை ஏன் விதிக்கப் படவில்லை? என்ற கேள்விகள் இன்று வரை ஒரு புதிராக நிற்கின்றன. மும்பை விசேஷ நீதிமன்றமோ இது குறித்து மூச்சு விடவில்லை.

ஒரு அரசு வக்கீலாக மாத்திரம் நிற்காமல் ஏதோ வெளியுறவுத்துறை செயலாளர் போல வெளியரங்கில் சரமாரியாக பாகிஸ்தானை குற்ற்ம் சாட்டிப் பேசிய திருவாளர் உஜ்வல் நிகமின் வாயிலிருந்து ஒரு தடவை கூட ஹெட்லி என்ற பெயர் வரவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வரிவிடாமல் அலசிய மீடியாக்களிலும் இது பற்றி ஒரு விவாதமும் சர்ச்சையும் எழவில்லை.

மிக அத்தியாவசியமான இந்தக் கேள்வியை கண்டு கொள்ளாத மீடியாக்களும் இந்துத்துவ அரசியல் வாதிகளும் சதடி சாக்கில் கசாபுக்கு தூக்கு என்ற விசயத்தோடு அப்ஸல் குருவின் தூக்கு சமாச்சாரத்தையும் சந்திக்கு இழுத்த்தார்கள்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்டி அநியாயத்திற்கு இதில் அக்க்றை காட்டியது. அதன் வெத்து வேட்டுச் செய்தியாளர் பொய்யான கோபத்தோடு இந்த விசயத்தில் காட்டிய ஆக்ரோஷத்தை கண்டிருந்தால் நீங்கள் ஆடித்தான் போயிருப்பீர்கள். அவ்வளவு கோபம் அவருக்கு. என்ன முட்டாள் செய்தியாளர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு இந்த விசயத்தை இழு இழி என்று அந்த தொலைக்காட்சி இழுத்த்து. அதன் பிறகு இந்த ஜுரம் மற்ற சானல்களையும் தொற்றிக் கொண்ட்து.

மும்பை தாக்குதல் வழக்கில் இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்த வழக்கின் முதல் கட்ட நடவடிக்கையே. இந்த தண்டனைக்கு, குற்றவியல் நடைமுறை சட்ட விதிகள் பிரிவு 366ன் கீழ், மும்பை ஐகோர்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே நேரத்தில், கசாப் தரப்பிலும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்படலாம். அப்படி அப்பீல் செய்யப்பட்டால், வழக்கின் அனைத்து சாட்சிகளும் மீண்டும் விசாரிக்கப்படுவர். பின்னர் தான் தண்டனையை அப்படியே உறுதி செய்யலாமா அல்லது குறைக்கலாமா என்பதை மும்பை ஐகோர்ட் முடிவு செய்யும். கசாப்பிற்கான மரண தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தாலும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பு உண்டு. அப்படி அப்பீல் செய்யப்பட்டால், முந்தைய தீர்ப்புகள் உட்பட அனைத்து அம்சங்களையும் சுப்ரீம் கோர்ட் தீவிரமாக பரிசீலித்து தீர்ப்பு வழங்கும். சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்தால், அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், ஜனாதிபதியிடம், கசாப் கருணை மனு அளிக்கலாம்

உச்ச நீதிமன்றத்தால் தூக்கு உறுதி செய்யப் பட்ட 29 பேர் இன்னும் ஜனாதிபதியிடம் மனுக் கொடுத்து வரிசையில் நிற்கிறார்கள். கசாப் அந்த வரிசையில் நிற்கப் போகிறானா என்பதே இன்னும் தெளிவாகவில்லை.


இது ஓரளவு படிப்பறிவுள்ள அனைவருக்கும் தெரியும் என்கிற போது கேமராவுக்கு முன்னாள் கிழவி நியாயம் பேசிக் கொண்டிருக்கிற வம்பர்களுக்குத் தெரியாமல் போவது ஆச்சரியமே.

நீதிமன்ற அமைப்பை பராமரிக்க் வேண்டியதில்லை என்றால் எப்போதோ கசாபை எண்கவுண்டரில் சுட்டுத் தள்ளியிருக்கலாமே! கசாபும் அதற்கு கவலைப் பட்டவன் அல்லவே! அவனுக்காக கவலைப் படுவதற்கும் யாரும் இல்லையே! என்பதல்லாம் அவர்களுக்குத் தெரியாதா? தொரியும். ஆனாலும்
மீடியாக்கள் வேணுமென்றே மக்கள் மத்தியில் பொறுப்பின்றி ஆத்திரத்தை கிளப்புகின்றன.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் துக்கு தண்டனை விதிக்கப் பட்ட்வர்கள்தான் தூக்கு தண்டனைய எதிர்பார்த்திருக்கும் கைதிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசாமல் அப்ஸல் குருவைப் பற்றி அவர்கள் பேசுவது இதில் தேவையற்ற மதச் சாயத்தை பூசும் உத்தியாகும்.

அஜ்மல் கசாபை தூக்கிலிட்டால் அதனால் இந்தியாவில் எந்த் விளைவும் வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை தூக்கி லிட்டாலும் பெரிதாக எந்த விபரீதமும் ஏற்பட வாய்ப்பில்லை.

அப்ஸல் குரு விசய்ம அப்படி அல்ல. அதில் காஷ்மீர் மாநிலமே கொந்தளித்துப் போகும் அபாயம் இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த காங்கிரஸ் காரரான குலாம் நபி ஆஸாத் அப்ஸல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசு. இப்போது திடீரென பேருந்தில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவன் பின் சீட்டில் உட்காந்திருப்பவனின் நீ எங்கடா போற என்று செல்போனில் கேட்பது போல அப்ஸல் குரு விசய்த்தில் விரைவாக ஒரு முடிவுக்கு வருமாறு தில்லி மாநில அரசிடம் கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறது.

'முன்னர் ஒரு சம்யம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது “ ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்தவர்களின் பட்டியலில் அப்சல் குருவுக்கு முன்பாக 21 பேர் உள்ளனர். இவர்கள் விஷயத்தில் முடிவு எடுத்த பின்னரே, அப்சல் குரு விஷயத்தில் முடிவு எடுக்க முடியும். இது சட்ட நடைமுறை' என்றார். இத்தனை நாட்கள் வாளாவிருந்த அவரது துறையே இப்போது தில்லி அரசுக்கு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது.

இது என்னடா வம்பாப் போச்சு என்று பய்ந்த தில்லி முதல் ஷீலா தீட்சித் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் உடனே அந்தக் கடித்த்தை ஆளுநருக்கு அனுப்பி “நீங்கள் ஏன் தாமதிக்கிறீர்கள் என்று கேட்டார். தில்லி மாநில ஆளுநரோ அப்ஸல் குவிற்கு தூக்கு தண்டனை வழங்கினால் ஏற்படக் கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் அதில் இல்லை என்று அதை திருப்பி அனுப்பி யிருக்கிறார். இதற்கிடையே தற்போதைய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வும் அப்ஸல் குருவிற்கு தண்டனை நிறைவேற்றுவது காஷ்மீரில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணும் என்று எச்சரித்திருக்கிறார்.

உங்களுக்கு தலை சுற்றுகிறதா?

நம் நாட்டின் தீவிரவாத்த்தாக்குதல்களின் உண்மைப் பின்னணியை தேடும் படலம் இப்படித்தான் மிகச் சுலபமாக மத மாச்சரியத்திற்குள் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது.


கசாபுக்கு மரண தண்டனையை தீர்ப்பளித்த நிதிபதி தகில்யானி கசாபை பார்த்து – நீ இறக்கும் வரை உனது கழுத்தில் கயிறுமாற்றப் பட்டு அதில் தொங்க விடப்படுவாய் என்று சொல்லி விட்டி “ யே ஹமாரா தரீக்கா ஹே” இது தான் எங்களூர்ப் பழக்கம் என்று சொன்னார்.

தீவிரவாத்த்தின் ஆணிவேரை கண்டறியாமல், புலனாய்பு அமைப்புக்களின் புனைவுகளில் நீதிமன்றங்களும் அரசுகளும் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் இந்த அக்கப்போ தொடந்து நடந்து கொண்டிருக்கும் வரை இப்படித்தான் சாத்தான் அனுப்புகிற அரக்கர்கள் சத்தமில்லாமல் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். உஜ்வால் நிகம்கள் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஏ பீ ஹமாரா த்ரீக்கா ஹே!

திருமணப் பதிவுச் சட்டம் - தீராக் குழப்பம்!

2009 நவம்பர் 24 ம் தேதி முதல் தமிழகத்தில் நடை பெறுகிற அனைத்து திருமணங்களையும் அரசுப் பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்ததிலிருந்து அரச்ல் புரசலாக கிளம்ம்பியிருந்த புகை மூட்டம் நாட்கள் செல்லச் செல்ல “எங்கள்து பிணங்ககளின் மீது சென்று தான் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியும்” என்ற சவடால் வரை வளர்ந்துள்ளது.

80 களின் பிற்பகுதியை நினைவூட்டும் ஒரு போராட்டச் சூழலுக்கு முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்லும் ஆவேசப் பேச்சுக்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

அரசின் புதிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன
· 2009 ம் ஆண்டு தமிழக அரசு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி "அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
· உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும்'
· கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.’
· மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.
· சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும்.
· விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள் அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
· பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது

இச்சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் ஒரு சலசலப்பு எழுந்துள்ளது உண்மையே என்றாலும் அந்தச் சலனம் திருமணப் பதிவை எதிர்த்து அல்ல.

ஏனேனில் ப்ன்னூறு வருடங்களாக திருமணங்களை முறையாக பதிவு செய்கிற அமைப்பு முஸ்லிம்களிடம் சிறப்பாக - அரசுக்கே முன்னுதாரணமாக அமையத்தகக் வகையில்-
செயல்பட்டு வருகிறது.

அதனால் தான் அரசின் திருமணப் பதிவுத் துறையில் “முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற அம்சம் இதுவரையில் இருந்ததில்லை. அரசின் திருமணப் பதிவைப் பற்றிய இணைய தளத்திற்குச் சென்றால் மூன்று வகையான பதிவுப் பகுதிகளைக் காணலாம். “இந்துத் திருமணப் பதிவு” “கிருத்துவத் திருமணப் பதிவு” தனிநபர் திருமண்ப் பதிவு என்ற மூன்று பதிவுகள் மட்டுமே பதிவுத்துறை அலுவலகக் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

“முஸ்லிம் திருமணப் பதிவு” என்ற ஒரு அம்சமே திருமணப் பதிவுத்துறையின் பதிவேடுகளில் இல்லாதிருப்பதற்கு, இஸ்லாமிய திருமணங்கள். முறைப் படி முஸ்லிம் ஜமாத்துக்களில் அல்லது மாவட்ட மாநக காஜிகளிடம் பதிவு செய்யப் பட்டு வந்ததே காரணமாகும்.

தமிழகம் மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரை எந்த ஒரு முஸ்லிம் அவர் வாழும் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்ந்த ஜமாத் அமைப்பில் இணைந்தே வாழ்கிறார். அவர் சார்ந்துள்ள ஜமாத் அமைப்பு அவர் மீது அரசை விட பலமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதும் எதார்த்தம்.

ஒவ்வொரு பள்ளிவாசலும் அல்லது ஒவ்வொரு ஜமாத் அமைப்பும் திருமணப் பதிவுப் புத்தகம் ஒன்றை மிக எச்சரிக்கையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

ஒரு சொத்து வழக்கிற்காக 1928 ல் நடை பெற்ற ஒரு திருமணத்திற்கான சான்று தேவைப் பட்ட போது பள்ளிவாசலின் பழைய நோட்டுப் புத்தகம் ஒன்றில் அத்திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்த்ததை தாங்கள் எடுத்துக் கொடுத்ததாக தாராபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் நிர்வாகி கூறினார்.

நான் எங்களது குடும்பம் சம்பந்தப் பட்ட ஒரு பள்ளிவாசலில் என் பெற்றோரின் திருமண்ப் பதிவை பார்த்திருக்கிறேன், எங்களது தாத்தா பாட்டியினுடைய பதிவும் கூட அந்தப் புத்தகத்தில் இருப்பதாக எனது உறவினர்கள் சொல்லியிருக்கிறார்கள்,

முஸ்லிம் திருமணம் பெண் வீட்டைச் சார்ந்த ஜமாத்தின் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது, அல்லது ஊர்க் காஜி திருமணத்தை பதிவு செய்கிறார். அப்போது மண்மகனது திருமண நிலையைப் பற்றிய ஒரு சான்றறறிக்கை அவர் சார்ந்துள்ள ஜமாத் அளிக்கிறது. அந்த அறிகையின் அடிப்ப்டையிலேயே திருமணம் நடத்தி வைக்கப் படுகிறது.

பள்ளி வாசலின் பதிவு இஸ்லாமிய முறைப்படியான திருமணம் நடைபெறுகிற அந்த இடத்திலேயே நேரடியாக நிமிடக் குறிப்போடு பதிவு செய்யப் படுகிறது.

மண்மக்களுடைய முழு பெயர் விலாசம் மற்றும் கையொப்பம் பெண்ணின் பொறுப்பாளரின் பெய்ர் மற்றும் கையொப்பம் பெண் வீட்டார் சார்பாக ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் சார்பாக ஒரு சாட்சி அவர்களது விலாசம் கையொப்பம். திருமணத்தை நடத்தி வைத்த மௌல்வியின் பெய்ர் மற்றும் கையொப்பம், திருமணத்தை பதிவு செய்த ஜமாத்தின் முக்கியப் பொறுப்பாளரான முத்தவல்லியின் கையொப்பம் ஆகிய விபரங்களோடு திருமணக் கொடையாக மாப்பிள்ளை வழங்க வேண்டிய மஹர் தொகையும் ப்ள்ளிவாசல்களின் திருமணப் பதிவேடுகளில் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

பெரும்பாலான ஜமாத்துக்களின் பெண் வீட்டிலிருந்து கொடுக்கப் படுகிற பரிச்ப் பொருட்களையும் கூட குறித்து வைத்துக் கொள்கிறார்கள்.

உங்களுக்கு அருகே இருக்கிற ஏதாவது ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று அல்லது ஒரு முஸ்லிம் திருமணத்திற்குச் செல்லும் போது திருமணம் நடைபெறுகிற மேடை அருகே சென்று கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், அரசின் பதிவு ஏற்பாடுகளுக்கு ச்ற்றும் குறைவில்லாத இன்னும் சொல்வதானால் அதைவிடச் சிறந்த, பாதுகாப்பான, எளிதான பதிவு நடை முறை முஸ்லிம் சமூகத்தில் இருக்கிறது என்ற உண்மையை நேரில அறிந்து கொள்ளல்லாம்.

இந்நிலையில் அரசின் புதிய சட்டமானது முஸ்லிம்கள் இரண்டு முறை தங்களது திருமணத்தை பதிவு செய்யவேண்டிய சிரமத்தை தருகிறது.

இதைக் கூட ஒரு சமாதானம் சொல்லி ஏற்றுக் கொள்ளலாம். ஜமாத்துக்களில் நடைபெறுகிற பதிவை அந்தத்த ஜமாத்துக்களே பொறுப்பேற்று பதிவுத் துறைக்கு 100 ருபாய் இணைது தபாலில் அனுப்பி விட்டால் அரசிடமிருந்து பதிவுச் சான்று கிடைத்து விடும். இதில் ஜமாத்துக்களுக்கு ஒரு வேலை அதிகம் என்றாலும் மக்களுக்கு கிடைக்கிற நன்மையை கருதி ஜமாத்துக்கள் இத்திட்டத்தை ஏற்க வாய்ப்பிருக்கிறது. .

அரசின் பதிவு என்பது செல்வாக்கு மிக்கது என்பதில் சந்தேகமில்லை. வெளிநாடு செல்பவர்களுக்கு அரசின் பதிவு தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியே! ஆனால் அதிலுள்ள பலவீனங்கள் என்ன் என்பது கூட அனைவரும் அறிந்ததே!

திருமணப் பதிவு குறித்த அரசானையைப் பற்றிய செய்தியை தினமலர் இனைய தளத்தில் படித்து ஏராளமானோர் அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தனர். அதில் என்னைக் கவர்ந்தவை இரண்டு ஒன்று

பதிவு செய்யும் போது ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மணமக்களுக்கு ஏதாவது மொய் கொடுப்பார்களா? என்ற நெல்லை வாசகரின் குரும்பு; இன்னொன்று பதிவுக் கோரிக்கையை 100 ரூபாய் கட்டணத்துடன் அஞ்சல் வழி அனுப்பினால் தப்பிக்க்லாம். நேரடியா போனால் வசூலான மொத்த மொய்ப் பணத்தை குடுத்துடு வரவேண்டியதுதான். என்ற சென்னை வாசகரின் அங்கதம்.


இந்தியாவில் பதிவுத்துறைதான் மிக அதிகமாக ஊழலில் திழைக்கிற துறை என்பது ஊருக்கு தெரிந்த ரக்சியம் இந்நிலையில் திருமணப் பதிவை கட்டாயப் படுத்தி, பதிவு அலுவலர் ஏற்றுக் கொண்டால் தான் திருமணப் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும் – அவர் நிராகரித்தால் நிராகரித்தது தான என்ற நிலையில் திருமணப் பதிவை க்ட்டாயப் படுத்தினால் அது அதிக ஊழலுக்கே வழி வகுக்கும் என்ற குற்றச் சாட்டை சொல்லி சிலர் திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். என்றாலும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் இந்தக் காரணத்தை பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை. ஏன்னெனில் பத்திரர்ப் பதிவு துறையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக யாரும் தங்களது சொத்துக்களை பதிவு செய்யாமல் இருப்பதில்லை.

முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் சங்கடப் படுத்துகிற முதல் அமசம் இச்சட்டம் முஸ்லிம் ஷரீஅத் சட்ட விதிகளில் கைவைத்து விடுமோ என்ற அச்சமாகும். ஏனென்றால நீட்டி முழக்கி பேசப்பட்டிருக்கிற அரசின் உத்தவு விளக்கெண்ணய்த் தனமாக அலலது குயுக்தியாக அமைந்திருக்கிறது.

எந்த மதப் படி திருமணம் நடைபெற்றிருந்தாலும் அதை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிற அரசு அந்த மதம் அனுமதிக்கிற விதிகளின் படி அத்திருமணப் பதிவு ஏற்கப் படும் என்று சொல்லியிருக்கவேண்டும் .ஆனால் அப்படிச் சொல்ல வில்லை.

இந்த ஒரு வரி அரசின் உத்தரவில் சேர்க்கப் பட்டிருக்குமானால் அரசின் உத்த்ரவை சங்கடமில்லாமல் முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசின் புதிய சட்டம் வயது சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மட்டுமே கூறுகிறது. பெண் 18 வயதை அடைந்திருக்க வேண்டும் ஆண் 21 வய்தை அடைந்திருக்க வேண்டும் என்ற வார்த்தை அதில் இடம் பெற வில்லை. இது தந்திரமா? குழப்பும் உத்தியா? அல்லது எதார்த்தமாக நடந்த விசயமா என்று தெரியவில்லை.

அரசின் பொதுவான திருமணப் பதிவுச் சட்டத்தில் இந்த வயது வரம் கட்டாயமானது தான் என்றாலும் இதிலிருந்து முஸ்லிம்களுக்கு அவர்களது பர்சனல் லா சரீஅத் சட்டத்தின் படி விதிவிலக்கு உண்டு.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் முஸ்லிம் ஷரிஅத் சட்டம் அனுமதிக்கும் வகையில் நடைபெறுகிற சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்க் சார்பான் தீர்ப்புக்கள் வழங்கப் பட்டிருப்பதே அதற்குச் சான்று

அதற்கு மிகச் சமீபத்திய ஒரு உதாரணம், 2009 ம் ஆண்டின் இறுதியில் டிஸம்பர் 17 ம் தேதி அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு,

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெரம்புர் பகுதையை சேர்ந்த சைருல் ஷேக் என்ற 26 வயது இளைஞனும் அனிதா ராய் என்ற 18 வ்யதை அடைய சில மாதங்களே உள்ள பெண்ணும் திருமண் செய்து கொண்டனர். அனிதாவின் தாய் ஜொட்ஸானா தனது மளை சைருல் க்டத்திச் சென்று திருமணம் செய்துவிட்டதாக புகார் பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமனற நீதிபதிகள் நீதியரசர் பினாகி சந்திர கோஷ, (Justice Pinaki Chandra Ghosh) நீதியரசர் எஸ்.பி. தாலுக் தார் (Justice S P Talukdar) ஆகிய இருவரும் இத்திருமணம் இஸ்லாமிய சட்ட விதிகளின் படி சட்ட்ப் பூர்வமாக நடை பெற்றுள்ளது என்ற சைருலின் வழக்கறிஞர் முன் வைத்த வாதத்த்தை ஏற்றுக் கொண்டு சைருல் ஷைகுகு முன் ஜாமீன் வழங்கியுள்ளனர்.

ஆர் எஸ் எஸ் ஸின் ஆதரவு பத்ரிகையான ஆர்கணைசர் (ORGANISER
January 24, 2010 -) ஆங்கில இதழ் இந்த ஆண்டு ஜன்வரி இதழில் இந்த தீர்ப்பை விமர்சனம் செய்து கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது என்றாலும் முஸ்லிம் பர்சனல் லா வின் படியான முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப் பட்டுள்ளதை இச்செய்தி தெளிவுபடுத்துகிறது.

இவற்றை கருத்தில் கொண்டோ என்ன்வோ தமிழக அரசின் புதிய சட்டம் வய்தைப் பற்றி பேச்சை எடுக்கவில்லை. ஆனால் போதிய தகவல் கிடைக்காத பதிவுத் துறை அதிகாரிகளோ தங்களது பழைய வழக்கின் படியே 18 வய்துக்கும் குறைவான பெண்ணுடைய திருமணத்தை தங்களால் பதிவு செய்ய முடியாது என்று கூறிவருகின்றனர். சில மாவட்ட பதிவாளர்கள் இன்னும் இது பற்றிய விரிவான தகவல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் பெரும்பலான் மாவட்ட பதிவாளர்கள் “திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் இல்யெனில் குற்ற வ்ழக்கு பதிவு செய்யப் படும் என்ற எச்சரிக்கையை கடமை தவறாமல் கச்சிதமாக செய்துவிட்டனர். அப்படி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளிடம் சென்று அந்த திருமண் விண்ணப் பம் தாருங்கள் என்று கேட்ட போது இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்ற பாட்டையே பாடிக் கொண்டிருந்தனர் என்பதும் நிஜம்.

நாடு முழுவதும் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஒரு உத்தரவிற்கேற்ப அரசுகள் அவசர அவசரமாக் சட்டம் இயற்றி விட்டன.

நீதிமன்றம் அவ்வாறு உத்தவிட்டதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்தியாவின் பல சமுக அமைப்புக்களில் திருமணங்களை பதிவு செய்து வைக்கிற எந்த ஏற்பாடும் இல்லை. அது மட்டுமல்ல எங்காவதொரு கோயிலில் வைத்து, அல்லது சாமி படத்துக்கு முன்னாள் நின்று கொண்டு, தனிமையில் ஒர் பெண்ணிண் கழுத்தில் மாலையை மாட்டிவிட்டு அதை திருமணம் என்று சொல்லி ஏமாற்றுவது ஏராளமாக நடைபெறுகிறது. இதில் படித்தவர்கள் பாம்ரர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் ஏமாறுகின்றனர். நியாயமானதும் கூட. பதிவு செய்யப் படாத திருமணங்கள் பல வற்றில் அதையே சாக்காக வைத்துக் கொண்டு பெண்கள் மீது அநீதி இழைக்கப் படுகிறது. தில்லியில் ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் திருமணங்கள் நடை பெறுகிறது என்றால் 1500 திருமணங்கள் தான் பதிவு செய்யப்படுவதாக் CNN IBN கூறுகிறது. Delhi which sees over 50,000 weddings a year hardly 1500 marriages are registered, which means just three per cent of the total.

இத்தகைய திருமணங்களில் பிரச்சினை வருகிற போது வழக்கிற்கு அடிப்ப்படையாக இருக்கிற திருமணத்தைப் பற்றிய எந்த ஆதாரமும் இருப்பதில்லை. இத்தகைய நிகழ்வுகளால் நீதிபதிகள் கோபமடைவது இயற்கையானதே!

அத்தகைதொரு தார்மீக கோபத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமனற நீதிபதி Justice Arijit Pasayat திருமணங்களை பதிவு செய்வதை கட்டாயப் படுத்தும் சட்டமொன்றை மூன்று மாதங்களுக்கு இயற்று மாறு இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தர்விட்டார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயைக்கப் பபடுவதாக இருக்கலாம்;. ஆனால் அவை பூமியில் பதிவு செய்யப் பட வேண்டும் என்றார் நீதிபதி. Marriages may be made in heaven but they will have to be registered right here on earth அந்த அடிப்படையிலேயே தமிழக் அரசும் சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால் அரசுக சட்டம் இயற்றுவதற்கு முன் இந்திய சமுக்க அமைப்பிலுள்ள பல்வேறுபட்ட அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இது பற்றி விரிவான தொரு ஆய்வு அல்லது விவாதம் அல்லது ஆலோசனை செய்திருக்க வேண்டும். அமெரிக்காவை கவ்னிக்கிற் அவசரத்தில் அதெற்கெல்லாம் நேரமில்லை எனபதலோ என்ன்வோ அரசு பொத்தம் பொதுவாக சட்டம் இயற்றிவிட்டது.

அதனால் இச்சட்டத்தில் பல வேடிக்கை விநோதங்கள் மலிந்து கிடக்கின்றன்.
சட்டத்தின் நோக்கம் என்ன வேன்பதே கேள்விக்குரியகி இருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு கொண்டு வந்து தரப் ப்டும் தக்வல்களை பதிவு செய்வதாலோ அல்லது நிராகரிப்பதாலோ என்ன நன்மை என்பதே முக்கியக் கேள்வி?

ஒரு க்ல்யாணம் நடந்து எல்லாம் முடிந்த பிறகு 89 நாட்கள் கழித்து அல்லது 50 ரூபாய் கட்டணம் அதிகம் செலுத்தி விட்டு நான்கு மாதக் கருவோடு ஒரு தம்பதியின்ர் வந்து தங்கள்து திருமணத்தைப் பதிவு செய்கிற போது அதிலிருக்கிற ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கை கண்டுபிடித்து - அல்லது சாட்சியின் அட்ரஸ் புரூப் தெளிவில்லை என்று ஒரு பதிவாளர் பதிவு செய்ய மறுப்பாரானால் அந்த திருமணம் என்னவாகும்? அல்லது அந்தப் பதிவு என்னவாகும்?

ஒரு சரியான திருமணப் பதிவு என்பது திருமணத்தின் போது நடை பெற வேண்டும். அந்தப்பதிவுக்குப் பின்னரே திருமணம் அங்கீகாரம் பெற வேண்டும். அது தான் சரியான பதிவாக இருக்க முடியும். அப்படியானால் முஸ்லிம் சமுகத்தில் இருப்பது போன்ற திருமணப் பதிவை மற்ற சமூக அமைப்ப்புக்களுக்கு விரிவு படுத்த அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். சமய நம்பிக்கை அற்றவர்கள் அல்லது சமய அடிப்படையில் திருமணம் செய்ய விரும்பாதவர்கள் ஒரு நீதிபதி அல்லது ஒரு தாசில்தார் குறைந்த பட்சம் ஒரு நோட்டரி வக்கீலின் முன்னிலையில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தால் அது திருமணங்களைப் பாதுகாப்பதன் சரியான் ஏற்பாடாக அமைந்திருக்கும். அதை விடுத்து திருமணத்தை முடித்துவிட்டு வந்து தகவல்களை கொடு அதை நான் சரி பார்க்கிறேன் என்பது குழந்தை பெற்றுக் கொண்டபின் தங்களது திருமணங்களை அறிவிக்கிற வகையறாக்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

ஆயினும் ஒரு முறையான கட்டமைப்பு இல்லாத சமூகங்களில் திருமண உறவுகளை பாதுகாப்பதற்கு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிற பெண்களைப் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் உதவிகரமாக இருக்கும்.

முஸ்லிம் சமூகத்தில் ஒரு முறையான சமூக கட்டமைப்பும் சரியான திருமணப் பதிவு முறையும் இருப்பதால் அரசு அதை கவனத்தில் கொண்டு சட்டத்தின் வாசகங்களை அமைத்திருக்க வேண்டும்

அப்படிச் செய்யாததால் ஒரு சரியான நடைமுறையை பன்னெடுங்காலமாக கடைபிடித்து வருகிற ஒரு சமுதாயமே அந்நடமுறை சட்டமாகி பொதுவாவதை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்பட்த்தி விட்டது.

முஸ்லிம் சமுகத்தின் முறையான பதிவுகளை அரசு அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்க வேண்டும். உள்ளபடியே அது பாதுகாப்பானது. உண்மையானது.

அப்படி அரசு அறிவித்திருக்கும் என்றால் திருமணப் பதிவுச் சட்டத்தின் படி 2009 நவம்பர் 24 லிருந்து இதற்குள்ளாக பன்னூற்றுக்கணக்கான திருமணங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கும்.

அரசின் அறிவிப்பில் காணப் பட்ட குழப்பம் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் தேவையற்ற ஒரு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்தை முழைமையாக எதிர்க்கிற -ஒப்புக் கொள்ளமுடியாது என்று மறுக்கிற நிலை உருவாகியுள்ளது.

“எங்களது சமூகத்தில் நடைபெறுகிற நூற்றுக்கு நூறு சதவீத திருமணங்களும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட அமைப்புக்கள் மூலம் ஏற்கென்வே பதிவு செய்யப் படுகிற போது எதற்காக நாங்கள் அதை மீண்டும் டூப்ளிகேட் செய்ய வேண்டும் என்று. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (மியாகான் பிரிவின்) தலைவர் தாவூத் மியா கான் கேட்பதாக ஹிந்து ஏடு கூறுகிறது.

"When already 100 per cent marriages in Islam are registered by the government approved authorities, why they need duplication and we are afraid that this maybe misused," says Indian Union Muslim League President MG Dawood Mia Khan

முஸ்லிம் சமய அறிஞர்கள் மட்டுமல்லாது முஸ்லிம் பொதுமக்களும் இது தேவையற்று என்று கருதுகிறாகள் என அந்த ஏடு மேலும் செய்தி வெளியிட்டிருந்தது.

It is not just religious leaders but even ordinary Muslims do not see the necessity in the government taking over what the Jamaath is already doing.

“அனைத்து முஸ்லிம் திருமணங்களும் 400 வருடங்களுக்கு மேலாக ஜமாத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. இன்றைய சட்ட விதிகளுக்கு ஏற்பவ. நாங்கள் ஏற்கெனவெ பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்வே அரசின் புதிய சட்டத்தை நான் உறுதியாக என்று கூறுயுள்ளார் யாஸ்மீன் பர்ஹானா
I am surely against this because if you consider Muslims we follow certain procedures for marriage. All the Islamic marriages are done according to the rules and regulations of the Jamaath. For more than 400 years, we have already been registering our marriages," points out Yasmeen Farhana.

திருமண்ப் பதிவுச் சட்டத்தை வாழ்த்தி வரவேற்க வேண்டிய முஸ்லிம்கள் அதற்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு அரசின் அலட்சியமே காரணமாகும்.

முஸ்லிம்கள் பலரும் அரசு பொதுச் சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதாக கருதுவதற்கும் ஜமாத்தின் அதிகாரங்களைப் பறிக்க அரசுத் திட்டமிடுவதாக கருதுவதற்கும் அரசின் போக்கே காரணமாகிவிட்டது.

அரசு எல்லாவற்றையும் தன் கையில் எடுத்துக் கொள்ளுமானால் சமுதாயம் வெறுமையாகிவிடும் என்று ஷியா காஜி குலாம் முஹம்மது மெஹ்தி கான் கொதிப்படைந்துள்ளார்.

இந்நிலையில் அரசு ஜமாத்துக்களின் முஸ்லிம் திருமணப் பதிவை அப்படியே மறுபரிசீலனையின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும. அல்லது அரசால் நியமிக்கப் படுகிற காஜிகளை திருமணப் பதிவாளராக அறிவிக்க வேண்டும். அவர்களது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஜமாத்துக்கள் செய்யும் திருமணங்களைப் அரசு அங்கீகரித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இல்லை எனில் இனி வரும் நாட்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் அரசுக்கும் தேவையற்ற ஒரு மோதல் போக்கு ஏற்படக் கூடும்.

பொதுத் தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில் அரசு யாரையும் பகைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்காது என்று எதிர்பார்க்கலாம்.

முஸ்லிம் அமைப்புக்களும் உச்ச நீதிமனறத்தின் தீர்ப்பு வந்த் போது சும்மா இருந்து விட்டு, மாநில அரசுகள் சட்ட முன் வரைவை சமர்ப்பிக்கும் போது இது பற்றிய் கவன்மே இல்லாமல் இருந்து விட்டு சட்டம் அமுலுக்கு வந்த பிறகு அதிலும் அதன் எல்லைக் கோட்டை தொட்ட பிறகு கூக்குரலிடுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள் இத்தகைய ஆவேசங்களால் ஆம்பிளிபையர்களின் ஐசிக்களும் கண்டன்சர்களும் சூடாகியதை தவிர வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.

ஷாபானு வழக்குப் பிரச்சினையின் போது செய்யப் பட்ட ஆர்ப்பாட்டங்களால் அல்லது உயிரிழப்புக்களால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. இந்தியாவின் மதிப்பு மிக்க அறிஞர்கள் ஆட்சித்தலைவர்களிடம் உரிய முறையில் பிரச்சினையை எடுத்து வைத்த விதத்திலேயே அந்த நீண்ட போராட்டத்தில் ஒரு முடிவு ஏற்பட்டது.

இப்போதும் அந்த வழிமுறையை கையாள்வதே உசிதம். எதெற்கும் சட்டத்தை சட்டத்தால எதிர்கொள்வதற்கு வசதியாக நீதிமன்றங்களை அனுக்வும் முயற்சிப்பது உசிதமானதாக அமையும். சைருல் ஷேக் விசயத்தில் மேற்கு வங்க உயர் நீதிமன்றம் சொன்னது போன்ற ஒரு தீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் தேவையற்றதாக்கி விடும். அரசியல் சாசணம் முஸ்லிம்ளின் தனிநபர் சட்டத்திற்கு வழங்கியுள்ள அந்தஸ்த்து அத்தகையது.

அதே நேரத்தில் முஸ்லிம் ஜமாத்துக்கள் பதிவு விதிகளில் தற்போது சொல்லப் பட்டிருக்கிற சில நல்ல விசயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நமது திருமணப் பதிவை இன்னும் சிறப்பானதாக வலிமையானதாக அமைத்துக் கொள்ளமுடியும்.

பதிவு என்ற முக்கியமான விசயத்திற்கு முஸ்லிம்களில் சிலர் போதுமான கவனம் செலுத்துவதில்லை. கல்யாண மணடபத்திற்கு வந்த பிறகு யாரோ ஒருவரை சாட்சியாக போடுகிற நடைமுறையை விட திருமண நிகழ்வுக்கு முன்ன்ரே வலி வக்கீல் சாட்சிகளை தெளிவாகவும் முறையாகவும் முடிவு செய்து கொள்வதும் அவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பதும் நல்லதே!

ஒரு திருமணத்தின் போது சாட்சியாக பெயர் கொடுத்தவர் கையெழுத்துப் போட்டு இலை வாங்க வெளியே போய்விட்டார். அவரைக் கண்டு பிடித்து திருமப் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சாட்சி யின் வேலை என்ன்வென்பதை அவர் அறியாதிருந்த்தே இதற்குக் காரணம்.

முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்கிற ஜமாத்துக்களின் பத்வேடுகளின் காலச் சூழலுகு ஏற்ப பல நல்ல புதிய சேர்க்கைகள் ஏற்கப்பட்டிருக்கிறது. முந்தை காலத்தில் பெயர் தந்தை பெய்ரை மட்டுமே எழுதுவார்கள் பின்னர் முகவரி எழுதும் பழக்கம் வந்தது. அதன் பின்னர் திருமணம் நடை பெறுகிற இடத்தை குறிப்பிடுகிற பழக்கம் வந்தது. அது போலவே தொலை பேசி எண்கள் ஐ டி கார்டு பிரதிகள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்வதில் என்ன சிரம்ம என்று ஜமாத்துக்கள் யோசித்து தேவையான மாற்றங்கள் செய்து கொள்வது நல்லதாகவே அமையும். இது எல்லா இடங்களிலும் சாத்தியமற்றது என்றாலும் சாத்தியமுள்ள இடங்களில் இதை கடைபிடிக்கலாம். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இது கடை பிடிக்கப் படுகிறது.

திருமணப் பதிவுச் சட்ட விவாகரம் தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வுக்கூட்டத்திற்கு முஸ்லிம் ஜமாத்துக்கள் உலமா அமைப்புக்கள் ஏற்பாடு செய்யாததும் ஒரு ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்துச் செயல்படாததும் ஒரு வகையான பின்னடைவேயாகும். அரசின் புதிய சட்டத்தை எதிர்ப்பதானால் எந்த வார்த்தகளில் எதிர்க்கிறோம் என்பதில் போதுமான கவனம் காட்டப் படவில்லை. பொதுவாக எதிர்க்கிறோம் என்ற கோபமான வார்த்தை முஸ்லிம்களிடம் இருக்கிற சிறப்பான நடைமுறையை மற்றவர்கள் அறியவிடாமல் செய்துவிட்டது.

முஸ்லிம் சமுகம் அரசின் எந்த சட்டத்திற்கும் கோர்ட்டின் எந்த உத்தரவிற்கும் பணிய மறுத்தது இல்லை. தேவையற்று முஸ்லிம்களின் தனி விவகாரங்களில் கோர்ட்டும் அரசுகளும் தலையிட நினைக்கிற போதுதான் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் அப்படி எதிர்ப்பை வெளியிட்ட விதம் எதிர்களுக்கு சாதகமாகிவிட்டது.

கோர்ட் எந்தச் சட்டம் போட்டாலும் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் நாம் மட்டும் பாபர் மஸ்ஜித் விசயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டுமா? என்ற மாய ஜாலம் பேசித்த்தான் இந்துத்துவ இயக்கங்கள் இந்துகளை தங்கள் பக்கம் ஈர்த்தார்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது.

இந்த சட்ட விவகாரத்தில் சமுதாயத்தின் பாதுகாவலர்கள் என்ற சிலரின் முகமூடிகள் தானாக கழன்விட்டதை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ளாமல் இருக்காது. அனைத்து முஸ்லிம் அமைப்புக்களு இச்சட்டத்தை எதிர்த்தாலும் நாங்கள் இதை ஆதரிப்போம் என்று சொன்ன முஸ்லிம்களை முன்னேற்றத் துடிக்கும்(?) அமைப்புக்கள் எந்த தளத்தில் செயல்படுகிறார்கள் என்பதை முஸ்லிம் ஜமாத்துக்கள் அவ்வளவு எளிதாக் மறந்து விடமாட்டார்கள். அவர்கள் வ்சூலுக்காக வருகிற போது இந்த வார்த்தைகளை ஞாபக்ப் படுத்துவோம் என்று ஜமாத் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

நான் சொன்னேன் பாவம்! அவர்கள் இழவு காத்த கிளிகளாகத்தான் ஆவார்கள். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை அழுத்தமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிற ஜமாத் அமைப்புககளின் வலிமையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்ற வேகம் அவர்களை அவ்வாறு பேச வைத்து விட்டது. அவர்களது பகல் கனவு பலிக்காது என்றேன்.
ஒரு வேளை இதுவே அரசின் கன்வாகவும் இருக்கும் என்றால் அதுவும் பலிக்காது தான்.