புறாக்கிராம்
நாங்கள் புறாக்கிராமத்திலிருந்து பேசுகிறோம் என்ற குரலை கேட்டதுமே நான் மகிழ்ச்சியடைந்தேன். நாகூர் தர்காவிலுள்ள மிக உயரமான (131) அடி மினாராவை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) கட்டினார். அவருக்கு பின்னர் தஞ்சையை ஆண்ட மன்னர் நாகூர் தர்காவின் மினாராக்களில் குடியிருக்கிற புறாக்களுக்கு உணவளிப்பதற்காக ஒரு ஊரை மானியமாக வழங்கினார். அந்த ஊரின் பெயர் தான் புறாக்கிராமம். தர்காக்கள் மத நல்லிணக்கத்திற்கு எப்படி எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன் என்பதற்கு அடையாளமாக பல சொற்பொழிவுகளிலும் புறாக்கிரமத்தை எடுத்துக் கூறியிருந்த எனக்கு அந்த ஊரிலிருந்து முதல் முறையாக ஒரு அழைப்பு என்றால் மகிழ்ச்சி வராதா ? ஆர்வத்தேடு நேற்று அந்த கிராமத்திற்கு சென்ற போது அங்கிருந்த கம்பீரமான பள்ளிவாசலும் அதை சுற்றி அழகுற அமைந்திருந்த ஊரும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அளித்தன. பள்ளிவாசல் நிர்வாகிகளின் அன்பும் அரவணைப்பும் மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. புறாக்கிரமத்தின் வரலாற்றை பள்ளிவாசல் நிர்வாகிகளோடு பகிர்ந்து கொண்ட போது நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த பள்ளிவாசல் பற்றி கல...