लिबास मदुरै प्रोग्रम्म ओं मार्च 17


லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கம் (லிபாஸ்)
ஒரு நாள் பயிலரங்கு
"முஸ்லிம் சமூகத்தில் பிரிவினைச் சக்திகள் - அவர்களை எதிர் கொள்ளும் வழிகள் என்ற தலைப்பில்" ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகிற மார்ச் 17 ம் தேத்தி செவ்வாய்கிழமை காலை 9:30 மணியளவில் மதுரை அன்னாநகரரில் உள்ள ஸ்டார் பார்க் கல்யாண மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இந்நிகழ்சியில்
திருவனந்தபுரம் ஜாமியா பலாஹிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் , வேலூர் பாக்கியாத்தின் முன்னாள் பேராசிரியர் பையலூர் செய்யது முஸ்தபா அவர்கள் பிரதானமாக கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விசயங்களில் நமது தரப்பிற்கான சான்றுகள் என்ன? எப்படி? என்ற தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். இது தவிர பிரிவினை வாதிகளை எதிர் கொள்ளும் நடைமுறை உத்திகள் குறித்தும் அவர்களுடை முரண்பாடுகள் பற்றியும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட இருக்கின்றன.
அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழா
அன்று மாலை தென்னிந்தியாவின் மார்க்கக் கல்விக்கு தன்னிகரற்ற சேவை செய்த அண்ணல் அஃலா ஹஜ்ரத அவர்களின் நினைவு விழா பாகவிகள் சந்திப்பு "தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்வில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் தாக்கம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கமாவும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்சியில் வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத்தின் முன்னாள் முதல்வர் , பி.எஸ்.பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட பெருந்தகைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்வமுள்ள ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
உங்களுக்கான வசதிகள் செய்வதற்கு வசதியாக உங்களது வருகையை மார் 15 க்குள் அலை பேசி வழியாக பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நிகழ்சியில் மர்ஹூம் கமாலுத்தீன் ஹஜ்ரத் வாழ்கை ஒரு வகுப்பறை நூல் வெளியிடப் படும் (இன்ஷா அல்லாஹ்)
pह: 9443979187

Comments

Popular posts from this blog

ஜகாத் பைத்துல்மால்

உமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி

மீலாது அன்பின் அடையாளம்